பஜ்ரங் ராம் பகத் கடந்த ஆறு முதல் ஏழு மாதங்களாக தினமும் 10 ரூபாய் சேமித்து பணத்தை சேகரித்தார். சுமார் ரூ.40,000 நாணயங்களைச் சேகரித்த பிறகு, தீபாவளியன்று, தனது மகள் சம்பா பகத்துடன் நகரத்தில் உள்ள தேவ்நாராயண் ஹோண்டா ஷோரூமுக்குச் சென்று ரூ.98,700 விலையுடைய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை வாங்கினார்.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியின்படி, பகத் தனது மகள் சம்பாவுடன் ஜாஷ்பூரில் உள்ள ஒரு உள்ளூர் ஷோரூமுக்கு சென்று ரூ.98,700 கொடுத்து ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை வாங்கினார், அதில் ரூ.40,000 நாணயங்களாகவும், மீதமுள்ளவை ரூபாய் நோட்டுகளாகவும் இருந்தன. கடன் வாங்குவதை விட ரொக்கமாக செலுத்த விரும்புவதாக பகத் கூறினார்.
ஷோரூம்க்கு வந்த பஜ்ரங் ராம் பகத், சாக்குப் பையில் இருந்து நாணயங்களை கொட்டியதும், ஷோரூம் ஊழியர்கள் ஆச்சரியமடைந்தனர். விவசாயி ரூ.40,000 நாணயங்களை கொடுத்து ஸ்கூட்டரை வாங்கினார். பஜ்ரங் ராமின் நேர்மையான உழைப்பையும், அர்ப்பணிப்பையும் கண்டு ஊழியர்கள் மரியாதையுடன் நாணயங்களை எண்ணினர். நாணயங்களை எண்ணுவதற்கு ஊழியர்களுக்கு 3 மணிநேரம் ஆனது, ஆனால் அவர்கள் மிகுந்த பொறுமையுடன் பணத்தை எண்ணி விவசாயியின் புதிய ஸ்கூட்டரின் சாவியை ஸ்கூட்டர் சாவியை அவரிடம் ஒப்படைத்ததாக ஷோரூம் உரிமையாளர் ஆனந்த் குப்தா தெரிவித்தார்.
எனக்கு கடன் வாங்குவது பிடிக்காது. நான் சம்பாதிப்பதைச் சேமிக்கிறேன். அதனால்தான் நான் ஸ்கூட்டரை ரொக்கமாக வாங்கினேன். இது எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த மிகப்பெரிய தீபாவளி பரிசு, என்று பஜ்ரங் ராம் கூறினார். வைரலாகும் வீடியோவில், ஷோரூம் ஊழியர்கள் நாணயங்களை எண்ணுவதைக் காணலாம். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, விவசாயியின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்குப் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
In Chhattisgarh’s Jashpur, farmer buys honda activa for daughter and paid in coins.
Bajrag Ram Bhagat saved 40 thousand rupees in coins and was finally able to gift her daughter a scooty.What an emotional moment for the family, the video is pure love…
Jashpur is home to… pic.twitter.com/2eUKRzUA82
— Vishnukant (@vishnukant_7) October 23, 2025
இதுகுறித்து பி.காம் மாணவியான சம்பா கூறுகையில், என் அப்பா வீட்டிற்கு பெரிய பொருள் வாங்க தினமும் ரூ.10 அல்லது ரூ.20 நாணயத்தை சேமித்து வைப்பார். நாங்கள் இருவரும் சேர்ந்து, ஒரு ஸ்கூட்டர் வாங்கினால், 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரத்திலிருந்து பொருட்களை எளிதாகக் கொண்டு செல்ல முடியும் என்றும், குடும்பத்தில் உள்ள அனைவரும் அதைப் பயன்படுத்தலாம் என்றும் முடிவு செய்தோம், என்று சம்பா கூறினார்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, கிசான் சம்மன் நிதி மற்றும் மஹ்தாரி வந்தன் யோஜனா ஆகியவற்றால் தனது குடும்பம் பயனடைந்துள்ளதாக சம்பா விளக்கினார்.
October 28, 2025 8:18 AM IST
தினமும் ரூ.10 சேமிப்பு… ரூ.98,700 விலையுடைய ஸ்கூட்டரை மகளுக்கு வாங்கி தந்த விவசாயி.. 3 மணி நேரமாக நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்

