Last Updated:
பந்துவீச்சாளர்களுக்குச் சற்றும் சாதகமாக இல்லாத ஆடுகளத்தில் ராணா ஒரு மிகச் சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்தினார்.
இந்திய அணியில் கோலி – ரோஹித் சர்மாவால் ஹர்ஷித் ராணாவின் திறமை பாராட்டை பெறவில்லை என்று முன்னாள் வீரர் வருண் ஆரோன் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமாகவுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்தது. 3 ஆவது போட்டி சிட்னியில் நடைபெற்றபோது அதில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த மேட்ச்சில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 236 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணி பேட்டிங்கின்போது 3 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பிறகு அற்புதமாக பந்து வீசிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அடுத்து இந்திய அணியின் பேட்டிங்கின்போது ரோஹித் சர்மா 121 ரன்களும், விராட் கோலி 74 ரன்களும் சேர்க்க 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதுகுறித்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் கூறியதாவது-
இந்தப் போட்டி முழுவதுமே ரோஹித்-கோலி ஆட்டம் தான் ரசிகர்களுக்குத் தேவைப்பட்டது. அது அவர்களுக்குக் கிடைத்தது உண்மைதான். ஆனால், அந்த வெற்றிக்கு வித்திட்டவர் உண்மையில் ஹர்ஷித் ராணா தான்.
October 27, 2025 12:41 PM IST


