Last Updated:
முதல் 2 போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்தபோது ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெறுவது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன
சர்வதேச போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா எப்போது ஓய்வை அறிவிப்பார் என்பது குறித்து அவரது இளம்வயது பயிற்சியாளர் பதில் அளித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டார். அவரது தலைமையிலான இந்திய அணி நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தது.
ரோஹித் சர்மாவுடன் விராட் கோலியும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இரு வீரர்களும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் களம் கண்டனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 3ஆவது மேட்ச்சில் சதம் அடித்தார்.
முதல் 2 போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்தபோது ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெறுவது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் கடைசி போட்டியில் விராட் கோலி 74 ரன்களும், ரோஹித் சர்மா 121 ரன்களும் எடுத்து விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தனர்.
இந்நிலையில் ரோஹித் சர்மா எப்போது ஓய்வை அறிவிப்பார் என்பது குறித்து இளம் வயது பயிற்சியாளர் தினேஷ் லாட் கூறுகையில், ரோஹித் சர்மாவின் அபார பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றியில் பங்களித்துள்ளார். நிச்சயமாக அவர் 2027 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவார். அதன் பின்னரே அவர் ஓய்வை அறிவிப்பார்.
இன்னும் விராட் கோலியை தவறாக புரிந்து வைத்துள்ளனர். ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சச்சின் டெண்டுல்கர் ரோஹித்தும், விராட் கோலியும் இணைந்தால் எந்தவொரு ரிக்கார்டையும் முறியடிப்பார்கள். இருவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.
October 26, 2025 6:52 PM IST


