Last Updated:
Mann Ki Baat | அகில இந்திய வானொலியில் 127ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஆயுதப்படையினர் வெற்றியைப் பாராட்டினார்.
மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் இருள் சூழ்ந்த பகுதிகளில் தற்போது மகிழ்ச்சி எனும் தீபம் ஒளிர்வதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் ‘மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சி மூலம் பேசி வருகிறார். பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் அவர், சாதனை மனிதர்களைப் பாராட்டி வருகிறார். அந்த வகையில், 127ஆவது பதிப்பில் பேசிய அவர், நாட்டு மக்களுக்கு சத் பண்டிகை வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
சத் திருவிழா சமூகத்தின் ஒவ்வொரு சமூகத்தையும் ஒருங்கிணைப்பதாகவும், இந்தியாவின் சமூக ஒற்றுமைக்கு சத் திருவிழா சிறந்த எடுத்துக்காட்டு என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஆயுதப்படையினர் வெற்றியைப் பாராட்டினார்.
நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையை குறிப்பிட்டு பேசிய பிரதமர், தீவிரவாதிகளால் இருள் சூழ்ந்த பகுதிகளில் தற்போது மகிழ்ச்சி எனும் தீபம் ஒளிர்வதாகப் பெருமிதம் தெரிவித்தார்.
மக்கள் எங்கு வாழ்ந்தாலும் மரங்களை நடவேண்டுமென அறிவுறுத்திய பிரதமர் மோடி, அது உயிரினங்களின் முன்னேற்றத்திற்குப் பயனளிக்கும் என வேதங்கள் கூறுவதாகக் குறிப்பிட்டார்.
சர்தார் பட்டேலின் 150ஆவது பிறந்தநாளை நினைவுகூர்ந்த பிரதமர், நவீன இந்தியாவின் மிகச்சிறந்த அறிவாளிகளில் ஒருவர் என பாராட்டினார்.
October 26, 2025 3:23 PM IST


