Last Updated:
ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலால் உக்ரைனில் பல்வேறு பகுதிகள் கடுமையாக சேதமடைந்தன.
ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலால் உக்ரைனில் பல்வேறு பகுதிகள் கடுமையாக சேதமடைந்தன.
ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலால், உக்ரைன் தலைநகர் கீவ்-இன் பல்வேறு பகுதிகள் கடுமையாக சேதமடைந்தன. அங்கு குடியிருப்பு வளாகத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் காரணமாக வாகனங்கள் தீக்கிரையாகின. பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் மார்க்கெட் அருகே நடத்தப்பட்ட தாக்குதலால், அங்கிருந்தவர்கள் அச்சத்தில் உறைந்து போயினர்.
கட்டடங்கள் பற்றி எரிய, தீயை கட்டுப்படுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டது. ஹெலிகாப்டர் மூலமும் தீயை அணைக்கும் பணியிலும் அந்நாட்டு வீரர்கள் ஈடுபட்டனர். அங்கு உயிருக்கு போராடிய பூனைக் குட்டிகளை, வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 20 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
62 ஆளில்லா விமானங்களை ரஷ்யா ஏவியதாகவும், அதில் 50 ஆளில்லா விமானங்களை இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைன் விமானப் படை தெரிவித்துள்ளது. அதேசமயம், ரஷ்யாவில் தங்கள் வான் பாதுகாப்புகள் 121 உக்ரைனிய டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
October 26, 2025 6:39 AM IST


