Last Updated:
Bihar SIR வழக்கில் மத அடிப்படையில் வாக்காளர் பட்டியல் குறிப்பு இல்லை என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் சட்டப்படி நடத்தப்பட்டதா எனும் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதி பட்டியல் குறித்த முழு விவரங்களை தேர்தல் ஆணையம் இன்னும் வழங்கவில்லை என மனுதாரர்கள் தரப்பு வாதிட்டது.
தற்போது தேர்தலை நடத்துவதில் முழுமையாக ஈடுபட்டிருப்பதாகவும், 20ஆம் தேதி இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பு தெரிவித்தது. ஆனால் இந்த நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என மனுதாரர் தரப்பு குற்றம்சாட்டியது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இறுதி பட்டியல் வெளியிட்ட பின்னர் குறைபாடுகள் இருந்தால் நீதிமன்றம் பரிசீலிக்கும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து, பிகாரின் முந்தைய வாக்காளர் பட்டியலில் 7 கோடியே 89 லட்சம் பேர் இருந்ததாகவும், இதில் 7 கோடியே 24 லட்சம் பேர் மட்டுமே உரிய படிவங்களை தாக்கல் செய்ததாகவும் தேர்தல் ஆணையம் தரப்பு கூறியது.
இஸ்லாமியர்கள் பெருமளவுக்கு நீக்கப்பட்டதாக எழுந்த புகாருக்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், மத அடிப்படையில் வாக்காளர் பட்டியல் குறிப்பு இல்லை என்றது. தொடர்ந்து வழக்கு விசாரணை நவம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
October 16, 2025 10:15 PM IST


