
நவம்பர் 7ஆம் திகதி வரவு – செலவுத் திட்டம் தாக்கல் செய்வதற்கு முன்னர், நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்புப் பாதுகாப்புச் சோதனை நடத்தப்படவுள்ளது என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) இன்று (23) நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.
இந்தச் சோதனையின் ஒரு பகுதியாக, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறைகளும் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று சபாநாயகர் குறிப்பிட்டார்.
மேலும், பட்ஜெட் நாட்களுக்காக ஒரு சிறப்புப் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, பட்ஜெட் நாட்களில் பொதுமக்கள் காட்சிக்கூடத்திற்குள் நுழைய அழைக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

