சீனாவில், 82 வயதான மூதாட்டி ஒருவர், தனது நாள்பட்ட முதுகுவலியை குணப்படுத்த, நாட்டு வைத்தியம் என்ற பெயரில் 8 தவளைகளை உயிருடன் விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருக்கிறார்.
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் ஹாங்சோவைச் சேர்ந்த 82 வயதான ஜாங் என்பவர், பல ஆண்டுகளாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதற்காக அவர் பல்வேறு நவீன மருத்துவ சிகிச்சைகளை முயற்சி செய்தும், அவருக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கவில்லை.

