இருந்தாலும், அந்த ஆசையை மட்டும் இன்னமும் விடவில்லை ட்ரம்ப்.
அதற்கான அடையாளம் தான் நேற்று வெள்ளை மாளிகை வெளியிட்ட ‘The Peace President’ என்கிற பதிவு.
சமீபத்தில் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்தது இஸ்ரேல்-காசா போர். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை, இந்தப் போர் நிறுத்தத்தின் முதல்கட்ட பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தில் வெற்றிகரமாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பு கையெழுத்திட்டுருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம் ட்ரம்பின் முயற்சிகளே.
அதனால், இதற்கு அழுத்தம் கொடுத்தே வெள்ளை மாளிகை அந்தப் பதிவைப் போட்டுள்ளது.
இன்னொரு பக்கம், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் ட்ரம்ப் நோபல் பரிசு பெறுவதைப்போல சித்தரிப்பு படத்தை தனது பிரதமர் அலுவல் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
ஆனால், இந்த ஆண்டு நோபல் பரிசு பெறுபவர்களின் பட்டியல் கடந்த திங்கட்கிழமையே முடிவு செய்யப்பட்டுவிட்டது.
நோபல் பரிசுக்கான பரிந்துரையை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31-ம் தேதிக்குள் செய்திருக்க வேண்டும்.
பிப்ரவரி – மார்ச் மாதம் பரிந்துரைகள் ஷார்ட் லிஸ்ட் செய்யப்படும்.
மார்ச் – அக்டோபர் மாதம் ரிவ்யூ செய்யப்படும்.
அக்டோபர் மாதம் நோபல் பரிசுகள் அறிவிக்கப்படும்.
டிசம்பர் மாதம் நோபல் பரிசு வழங்கப்படும்.
இதன் படி பார்த்தால், ட்ரம்பின் பெயர் ஜனவரி மாதமே பரிந்துரைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதே ஜனவரி 20-ம் தேதி தான். அவர் போர் நிறுத்தம் செய்ததாக கூறிய அனைத்தும் ஜனவரி மாதத்திற்கு பிறகு தான் நடந்துள்ளது.
மேலும், அவரது பெயரை உலக தலைவர்கள் பரிந்துரைத்தது ஜூலைக்கு மேல் தான்.
ஆக, அவரது பெயர் அடுத்து ஆண்டு பரிசீலிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம்.
இந்த அடிப்படை சிக்கலாலும் ட்ரம்பிற்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை.
அடுத்த ஆண்டாவது, ட்ரம்பிற்கு நோபல் பரிசு கிடைக்குமா என்ன நினைக்கிறீர்கள் மக்களே?

