Last Updated:
இஸ்ரேல், ஹமாஸ் இடையே டிரம்பின் திட்டப்படி போர் நிறுத்தம் அமலாகி, 20 பிணைக்கைதிகள் மற்றும் 2,000 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், பரஸ்பரம் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
இஸ்ரேல், ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக போர் நீடித்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் 20 அம்ச திட்டத்தை ஏற்று இருதரப்பும் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளன. இதன் முதற்கட்டமாக, பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றவர்களில் உயிரோடு உள்ள 20 பேரை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர்.
2 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் வீடு திரும்பிய நிலையில், உறவினர்கள் ஆரத்தழுவி கண்ணீர் சிந்தினர். இதேபோல இஸ்ரேல் அரசும் 2,000 பாலஸ்தீன சிறைக் கைதிகளை விடுவித்தது. பேருந்தில் மேற்கு கரைக்கு வந்த அவர்களை உறவினர்கள் உற்சாகமாக திரண்டு வரவேற்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு உறவினர்களை சந்தித்த சிறைக் கைதிகள் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
October 13, 2025 10:19 PM IST