• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கேஜரிவால் கைது விவகாரம்: அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

GenevaTimes by GenevaTimes
April 15, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
கேஜரிவால் கைது விவகாரம்: அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை தில்லி உயர்நீதிமன்றம் உறுதிசெய்தது. இதையடுத்து, அவரது நீதிமன்றக் காவல் இம்மாதம் 23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று(ஏப். 15) விசாரணைக்கு வந்தது.

கேஜரிவால் கைது விவகாரம் தொடர்பான மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு அமலாக்கத்துறைக்கு பிறப்பித்துள்ள உத்தரவில், கேஜரிவால் கைது விவகாரம் தொடர்பாக இம்மாதம் 25-ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை உரிய விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கேஜரிவால் தாக்கல் செய்துள்ள மனு மீதான அடுத்தகட்ட விசாரணை இம்மாதம் 29-ஆம் தேதிக்கு பின் மீண்டும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரத்தில் கேஜரிவால் ஈடுபட முடியாத வகையில் அரசியல் உள்நோக்கத்துடன் அவர் கைது செய்யப்பட்டதாக கேஜரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டார்.

Read More

Previous Post

பாராளுமன்றத்தில் வேலைவாய்ப்பு

Next Post

Bumrah Meets Dhoni: தோல்வி இரண்டாவது பட்சம்; தல தோனிதான் எங்களுக்கு முதல்பட்சம் – ரசிகராக பும்ரா செய்த செயல்!-bumrah enters csk dressing room with special request for dhoni after mis defeat

Next Post
Bumrah Meets Dhoni: தோல்வி இரண்டாவது பட்சம்; தல தோனிதான் எங்களுக்கு முதல்பட்சம் – ரசிகராக பும்ரா செய்த செயல்!-bumrah enters csk dressing room with special request for dhoni after mis defeat

Bumrah Meets Dhoni: தோல்வி இரண்டாவது பட்சம்; தல தோனிதான் எங்களுக்கு முதல்பட்சம் - ரசிகராக பும்ரா செய்த செயல்!-bumrah enters csk dressing room with special request for dhoni after mis defeat

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin