மனிதர்கள் வாழ்வில் திருமணம் முக்கிய அங்கம் வகிக்கிறது. திருமணத்திற்காக பலர் விலையுயர்ந்த ஆடைகளை வாங்குவது, திருமண மண்டபம் புக் செய்வது, சிறந்த உணவு அளிப்பது என முடிந்த அளவிற்கு தங்களது திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த முயற்சிக்கின்றனர். இவ்வாறு பல லட்சம் செலவிட்டு ஏற்பாடு செய்யப்படும் திருமண விழாக்களில் பல குளறுபடிகள் ஏற்படும்.
மணமகள் திருமண விழாவில் இருந்து வெளியேறியதாகவும் அல்லது மணமகள் திருமண விழாவில் இருந்து வெளியேறியதாகவும் கேள்விப்பட்டிருப்போம் . ஆனால் இங்கு மணமகன், மணமகள் இருவருமே திருமண வரவேற்பு விழாவில் கலந்துக்கொள்ளவில்லை. மணமக்கள் வருவார்கள் என காத்திருந்த விருந்தினர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்த சம்பவம் குறித்து மணமகனின் தங்கை தனது கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். “எனது அண்ணனின் திருமண வரவேற்புக்காக உறவினர்கள் காத்திருந்தனர். வழக்கமாக திருமண வரவேற்புக்கு முன்பாக திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் மது அருந்தி மகிழ்ச்சி அடைவர். பிறகு புகைப்படங்கள் எடுக்கப்படும். ஆனால் அன்று நீண்ட நேரம் காத்திருந்தும் மணமக்கள் வரவில்லை. அங்கு அவர்கள் வரமாட்டார்கள் என்று எங்கள் யாருக்கும் தெரியாது. எனது அண்ணனின் நண்பர் ஒருவருக்கு மட்டும் தெரியும்.” என்றார்.
“மேலும் உறவினர்களிடம் மணமக்களை அறிமுகப்படுத்தவிருந்த எனது அண்ணனின் நண்பர் அவர்கள் திருமண வரவேற்புக்கு வரமாட்டார்கள் என்றும் அது குறித்து அவர்கள் வருத்தம் தெரிவித்ததாகவும் கூறினார். அதுமட்டுமன்றி மணமக்கள் ஹனிமூனுக்கு சென்றுவிட்டதாகவும் அவர் கூறினார். இது எங்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனது தாயும் தந்தையும் இதை குறித்து மிகுந்த வேதனையடைந்தார்கள். வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த உறவினர்கள், அனைவரும் கிசுகிசுக்க ஆரம்பித்துவிட்டனர்” என்றும் அவர் தெரிவித்தார்.
“நாங்கள் அவர்களை பலமுறை தொடர்புக்கொண்டும் அவர்கள் எங்கள் அழைப்பு ஏற்கவில்லை. அவர்கள் அப்போது தேனிலவுக்கு செல்ல பிரிஸ்டல் விமான நிலையத்திற்கு சென்றுவிட்டதாக அவர்களது நண்பர் தெரிவித்தார். அவர்கள் இன்னும் சில மாதங்களில் தேனிலவு செல்வதாக இருந்தது. ஆனால் அந்த தேனிலிவு டிகெட்டை கேன்சல் செய்துவிட்டு இரண்டு வாரங்களுக்கு முன்பாக வேறொரு தேனிலவுக்கு டிக்கெட் புக் செய்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : நல்லவனா இருக்குறது குத்தமா… இப்படியும் ஒரு விவகாரத்து!
மணமக்கள் இவ்வாறு திருமண வரவேற்புக்கு வராமல் தேனிலவுக்கு சென்றதுக்கு காரணம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதாவது மணமகனின் தம்பியின் காதலி கர்ப்பமாக இருப்பதாகவும் அதை தனது அண்ணனின் திருமணத்தில் அவர் அறிவிக்க இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக தான் மணமக்கள் திருமண வரவேற்பை புறக்கணிததாகவும் அவர்களது குடும்பத்தினர் கூறுகின்றனர். இருப்பினும் மணமக்களின் இந்த செயல் அந்த குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
