• Login
Sunday, October 19, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சென்னை, புறநகரில் கொட்டும் மழையிலும் களைகட்டிய தீபாவளி விற்பனை! | Diwali Sales Rush on Even Rain at Chennai

GenevaTimes by GenevaTimes
October 19, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
சென்னை, புறநகரில் கொட்டும் மழையிலும் களைகட்டிய தீபாவளி விற்பனை! | Diwali Sales Rush on Even Rain at Chennai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று தீபாவளி புத்தாடைகள் விற்பனை களைகட்டியது. கொட்டும் மழையிலும் தியாகராய நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

நாளைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாகவே கடைவீதிகளில் படிப்படியாக வியாபாரம் சூடுபிடித்து வருகிறது. குறிப்பாக தீபாவளிக்கு ஒரு நாளே இருக்கும் நிலையில் நேற்றும் குழந்தைகள், பெற்றோர், உறவினர்களுக்கு புத்தடைகளை வாங்க பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். இதனால் சென்னை, புறநகர் பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் நேற்று காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. குறிப்பாக தியாகராய நகர், ரங்கநாதன் தெரு முழுவதும் மனித தலைகளாக காணப்பட்டன.

பாதுகாப்பு பணியில் சுமார் 1,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் உயர் கோபுரங்களை அமைத்து கண்காணித்ததுடன் ஒலி பெருக்கியில் தங்களின் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு பொது மக்களை எச்சரித்த வண்ணம் இருந்தனர். சாதரண உடையிலும் மக்கள் கூட்டத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

தியாகராய நகர் பகுதியில் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, பாண்டி பஜார் போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் அதிமாக இருந்தது. அப்பகுதிகளில் உள்ள துணிக் கடைகளில் காலை முதலே உள்ளே நுழைய முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் அலை மோதியது. துணிக் கடைகளுக்கு இணையாக சாலையோர கடைகளிலும் துணிகள் மற்றும் அணிகலன்கள் விற்பனை அனல் பறந்தது. சென்னை, புறநகர் பகுதிகளில் காலை முதலே தொடர்ச்சியாக மழை பெய்து வந்த நிலையிலும், துணிக் கடைகளுக்கு வந்த மக்கள் ரம்மியமான குளிர்ந்த சூழலை ரசித்தபடி பொருட்களை வாங்கினர்.

படம்: எஸ்.சத்தியசீலன்

புத்தாடைகளை வாங்கிய பின் அனைவரும் அசைவ உணவகங்களை நோக்கிச் சென்றதால், உணவகங்களிலும் இனிப்பகங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தன. நீண்ட நேரம் காத்திருந்தே உணவருந்தும் நிலை ஏற்பட்டது. இதேபோன்று புரசைவாக்கம் நெடுஞ்சாலை, பழைய வண்ணாரப்பேட்டை எம்சி சாலை, புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பள்ளிக்கரணை, பூந்தமல்லி கடை வீதிகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.

புறநகரை பொறுத்தவரை முக்கிய வணிக பகுதிகளான குரோம்பேட்டை, தாம்பரம், மேடவாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால், ஒரு தெருவை கடக்கவே சில மணி நேரம் ஆனது. அதேபோல சாலையோர கடைகளில் அலங்கார பொருட்கள், பாசி மாலைகள், அணிகலன்கள் போன்றவற்றை வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டினர். இதனால், இந்த கடைகளிலும் கூட்டம் காணப்பட்டது.

புறநகரின் பல்வேறு இடங்களில் இருந்து ஒரேநேரத்தில் ஏகப்பட்ட வாகனங்கள் நுழைந்ததால் சென்னை மார்க்கமான ஜிஎஸ்டி, சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டது. பெருங்களத்தூர் முதல் பல்லாவரம் வரை வாகனங்கள் ஊர்ந்து ஊர்ந்து சென்றன. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.



Read More

Previous Post

ஜார்க்கண்ட் அணி இன்னிங்ஸ் வெற்றி | jharkhand beats tamil nadu by innings in ranji trophy

Next Post

பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன: கத்தார் அறிவிப்பு | Pakistan Afghanistan agree to ceasefire Qatar announces

Next Post
பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன: கத்தார் அறிவிப்பு | Pakistan Afghanistan agree to ceasefire Qatar announces

பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன: கத்தார் அறிவிப்பு | Pakistan Afghanistan agree to ceasefire Qatar announces

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin