தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) அறிவித்துள்ளது.
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ வலைத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk க்கு சென்று தேர்வு எண்ணை உள்ளிடுவதன் மூலம் முடிவுகளைப் பெறலாம்.
பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் 1911, 0112784208, 0112784537, 0112785922, 0112784422 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி எண்
இதேவேளை, நாடாளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை இம்முறை 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.
இதன்படி இந்த வருடம் 23,1638 சிங்கள மொழி விண்ணப்பதாரர்கள் மற்றும் 76,313 தமிழ் மொழி விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 30,7959 விண்ணப்பதாரர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
இதேவேளை, பல்கலைக்கழக மாணவர்கள் மஹாபொல புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்குரிய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (University Grants Commission) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிப்பவர்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |