• Login
Sunday, October 19, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆஸி.யுடன் முதல் ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: கில் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி | team india to play with australia in odi series today under shubman gill captaincy

GenevaTimes by GenevaTimes
October 19, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஆஸி.யுடன் முதல் ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: கில் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி | team india to play with australia in odi series today under shubman gill captaincy
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெர்த்: இந்​திய கிரிக்​கெட் அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இரு அணி​கள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரின் முதல் ஆட்​டம் இன்று காலை 9 மணிக்கு பெர்த் நகரில் உள்ள ஆப்​டஸ் மைதானத்​தில் நடை​பெறுகிறது. இந்​திய அணி புதிய கேப்​ட​னான ஷுப்​மன் கில் தலை​மை​யில் களமிறங்​கு​கிறது.

சீனியர் பேட்​ஸ்​மேன்​கள் மற்​றும் முன்​னாள் கேப்​ட​னான ரோஹித் சர்​மா, விராட் கோலி ஆகியோர் 7 மாதங்​களுக்கு பிறகு மீண்​டும் சர்​வ​தேச கிரிக்​கெட் போட்​டி​யில் களமிறங்க உள்​ளனர். டி20, டெஸ்ட் போட்​டிகளில் இருந்து இவர்​கள் ஓய்வு பெற்​று​விட்​ட​தால் இனிமேல் ஒரு​நாள் போட்​டிகளில் மட்​டுமே விளை​யாட உள்​ளனர்.

இதனால் ரோஹித் சர்​மா, விராட் கோலி​யின் ஆட்​டத்தை காண்​ப​தில் ரசிகர்​கள் மத்​தி​யில் மிகுந்த எதிர்​பார்ப்பு நிலவி வரு​கிறது. ஆஸ்​திரேலிய தொடருக்​காக இவர்​கள் இரு​வரும் தீவிர பயிற்​சிகளை எடுத்​துள்​ளனர். ரோஹித் சர்மா தனது உடல் எடையை கணிச​மாக குறைத்​துள்​ளார். மும்​பை​யில் அவர், அபிஷேக் நாயர் உதவி​யுடன் சில அமர்​வு​கள் பயிற்சி எடுத்​துள்​ளார். விராட் கோலி லண்​டனில் தனி​யார் பயிற்​சி​யாளர் உதவி​யுடன் நீண்ட நேரம் பயிற்​சிக்கு செல​விட்​டிருந்​தார்.

எனினும் இந்த இரண்டு ஜாம்​ப​வான்​களுக்​கும் உள்ள ஒரே சவால் என்​னவென்​றால், ஒரே ஒரு வடிவி​லான போட்​டி​யில் மட்​டும் விளை​யாட முடிவு செய்​து​விட்டு ஐபிஎல் தொடருக்கு பின்​னர் நீண்ட நாட்​களுக்கு பிறகு சர்​வ​தேச போட்​டி​யில் களமிறங்​கு​வது​தான். எனினும் இவர்​கள் தங்​களது கிரிக்​கெட் பயணத்​தில் ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ராக உயர்​மட்ட செயல்​திறனை வெளிப்​படுத்தி உள்​ளனர்.

சீனியர் நட்​சத்​திரங்​களான இவர்​கள் 2027-ம் ஆண்டு நடை​பெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை வரை விளை​யாட முடிவு செய்​துள்​ளனர். இதற்கு இந்த ஆஸ்​திரேலிய தொடர் தொடக்க புள்​ளி​யாக அமையக்​கூடும். இங்​கிருந்து அவர்​கள், தங்​களது இறு​திக்​கட்ட கிரிக்​கெட் பயணத்தை கட்​டமைக்க உள்​ளனர். கேப்​டன் பொறுப்​பில் இருந்து விடுக்​கப்​பட்​டுள்ள ரோஹித் சர்மா சீனியர் வீரர் என்ற புதிய பாத்​திரத்​துடன் செயல்பட உள்​ளார்.

ரோஹித் சர்மா கடைசி​யாக டி20 மற்​றும் ஒரு​நாள் போட்​டிகளில் இந்​திய அணிக்கு ஐசிசி கோப்​பைகளை கேப்​ட​னாக வென்று கொடுத்​திருந்​தார். மெல்​பர்​னில் தனது கடைசி டெஸ்ட் போட்​டி​யிலும் அவர் அணியை வழிநடத்​தி​யிருந்​தார். விராட் கோலி மீண்​டும் ரன்​வேட்டை நிகழ்த்த முடிந்​தால், ரோஹித் சர்மா தனது அபார​மான ஷாட்​களால் எதிரணிக்கு தொடக்​கத்​திலேயே அச்​சுறுத்​தலை அளிக்க முடிந்​தால், இவர்​கள் இரு​வரும் உலகக் கோப்பை தொடர் வரை நிலைத்​திருக்​கலாம்.

ஏனெனில் தற்​போதைய தேர்​வாளர்​களும் அணி நிர்​வாக​மும் எதிர்​காலத்தை மனதில் கொண்​டு, குறிப்​பாக 2027-ம் ஆண்டு ஒரு​நாள் உலகக் கோப்​பையை கருத்​தில் கொண்டு சில முக்​கிய முடிவு​களை எடுக்க வேண்​டிய கட்​டா​யத்​தில் உள்​ளனர். மேலும் புகழ்​பெற்ற கிரிக்​கெட் வீரர்​களான ரோஹித் சர்​மா​வும், விராட் கோலி​யும் தற்​போது தலைமை பொறுப்​பில் இல்லை என்​ப​தை​யும், தங்​களுக்​கான ஆடம்​பர​மான சூழ்​நிலை இல்லை என்​ப​தை​யும் அறி​வார்​கள். இதனால் அவர்​களிடம் இருந்து எந்​த​வித அழுத்​த​மும் இல்​லாமல் சிறந்த திறன் வெளிப்​படக்​கூடும்.

இது ஒரு​புறம் இருக்க புதிய கேப்​ட​னான ஷுப்​மன் கில்​லுக்கு இந்த தொடர் சவாலாக அமையக்​கூடும். ஏனெனில் அணியை கட்​டமைத்து அடுத்து கட்​டத்​துக்கு கொண்டு செல்ல வேண்​டிய இடத்​தில் ஷுப்​மன் கில் உள்​ளார். அவருக்கு ரோஹித் சர்​மா​வும், விராட் கோலி​யும் உறு​துணை​யாக இருக்​கக்​கூடும். 26 வயதான ஷுப்​மன் கில் டெஸ்ட் கிரிக்​கெட்​டில், கேப்​ட​னாக​வும், பேட்​ஸ்​மே​னாக​வும் இங்​கிலாந்து சுற்​றுப்​பயணத்​தில் அபார​மான செயல் திறனை வெளிப்​படுத்​தி​யிருந்​தார். தற்​போது அவரது ஒரு​நாள் போட்டி கேப்​டன்​ஷிப்​பும் வெளி​நாட்​டிலேயே தொடங்​கு​கிறது. ரோஹித் சர்​மா, ஒரு​நாள் போட்​டி​யின் கேப்​ட​னாக இந்​திய அணி​யில் உயர்ந்த தரநிலையை உரு​வாக்​கி​யிருந்​தார்.

அவரது தலை​மை​யின் கீழ் இந்​திய அணி 75 சதவீத வெற்​றிகளை குவித்​திருந்​தது. இதே​போன்ற செயல்​திறனை வெளிப்​படுத்​து​வ​தில் ஷுப்​மன் கில் முனைப்பு காட்​டக்​கூடும். ஆஸ்​திரேலிய சுற்​றுப்​பயணத்​தில் கேப்​ட​னாக​வும், பேட்​ஸ்​மே​னாக​வும் ஷுப்​மன் கில் சிறப்​பாக செயல்பட முடிந்​தால், அது ஒரு கேப்​ட​னாக அவரது தன்​னம்​பிக்​கையை மேலும் அதி​கரிக்​கும்.

பாட் கம்​மின்ஸ் காயம் காரண​மாக அவதிப்​பட்டு வரு​வ​தால் ஆஸ்​திரேலிய அணி மிட்​செல் மார்ஷ் தலை​மை​யில் களமிறங்​கு​கிறது. பிர​தான வேகப்​பந்து வீச்​சாள​ரான பாட் கம்​மின்ஸ் இல்​லாத போதி​லும் மிட்​செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்​வுட் வேகக்​கூட்​டணி இந்​திய பேட்​டிங் வரிசைக்கு அழுத்​தம் கொடுக்​கக்​கூடும். பேட்​டிங்​கில் டிரா​விஸ் ஹெட், கூப்​பர் கானொலி, மார்​னஷ் லபுஷேன், மேத்யூ ரென்ஷா ஆகியோர் பலம் சேர்க்​கக்​கூடும். டிரா​விஸ் ஹெட், இந்​திய பந்து வீச்​சாளர்​களுக்கு அழுத்​தம் கொடுக்​கக்​கூடும்.

இந்​திய அணி​யின் பேட்​டிங் வரிசை​யில் தொடக்க வீரர்​களாக ஷுப்​மன் கில், ரோஹித் சர்மா களமிறங்​கக்​கூடும். இதைத் தொடர்ந்து விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்​.​ராகுல் ஆகியோர் இடம் பெறு​வார்​கள். வேகப்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ராக நித்​திஷ் குமார் ரெட்​டி​யும், சுழற்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ராக அக்​சர் படேலும் சேர்க்​கப்​படக்​கூடும். பிர​தான சுழற்​பந்து வீச்​சாள​ராக குல்​தீப் யாதவ் களமிறங்​கக்​கூடும். வேகப்​பந்து வீச்சாளர்​களாக முகமது சிராஜ், அர்​ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா அல்​லது ஹர்​ஷித்​ ராணா இடம்​ பெறக்​கூடும்​.



Read More

Previous Post

மகனுக்காக சிறுநீரக தானம் கொடுத்த 72 வயது தாய்… எங்கே தெரியுமா? | இந்தியா

Next Post

விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் திடீரென நுழைந்த நரி; உயிர்தப்பிய 200 பயணிகள்!

Next Post
விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் திடீரென நுழைந்த நரி; உயிர்தப்பிய 200 பயணிகள்!

விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் திடீரென நுழைந்த நரி; உயிர்தப்பிய 200 பயணிகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin