Last Updated:
நேபாளத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய இந்தச் சம்பவம் அந்த நாட்டையும் கடந்து பல நாடுகளில் பேசுபொருளாக மாறி உள்ளது.
நேபாள அரசு வாட்ஸ்அப், ஃபேஸ்புக், எக்ஸ், அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட 26 சமூக ஊடக வலைதளங்களுக்கு அதிரடி தடையை விதித்துள்ளது. இந்தச் சம்பவம் நேபாளம் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
நேபாள அரசு சமீபத்தில் சமூக ஊடக நிறுவனங்கள் தொடர்பான ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதன்படி, அங்கு பொதுமக்கள் பயன்பாட்டில் இருக்கும் அனைத்து சமூக ஊடக வலைதளங்களும் அரசிடம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்தது. இவ்வாறு பதிவு செய்ய ஒரு வார கால அவகாசத்தையும் நேபாள அரசு வழங்கியிருந்தது.
ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் அரசின் உத்தரவை ஏற்று பதிவு செய்யவில்லை. இந்நிலையில், அதிரடி நடவடிக்கையாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு நேபாள அரசு அதிரடி தடையை விதித்திருக்கிறது. ஏற்கனவே சமூக ஊடகப் பயன்பாடுகள் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் நேபாளத்தில் எழுந்தன.
சமூக வலைதளங்களால் அரசுக்கு எதிரான தவறான கருத்துக்கள் பரப்பப்படுவது, வெறுப்பை ஏற்படுத்தக்கூடிய பதிவுகள் அதிகம் பகிரப்படுவது, தடை செய்யப்பட்ட பதிவுகள் உலா வருதல் உள்ளிட்ட பிரச்சனைகளின் காரணமாக சமூக ஊடக வலைதளங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
26 தளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், டிக் டாக், வைபர் போன்ற தளங்கள் அரசின் உத்தரவை ஏற்று தங்களது விவரங்களை அரசிடம் பதிவு செய்துள்ளதால், அந்தத் தளங்களுக்கு மட்டும் தடை விதிக்கப்படவில்லை. இந்தக் கடையே சமூக ஊடக வலைதளங்கள் தடை செய்யப்பட்டு இருப்பதற்கு நேபாளத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அரசுடைய இந்த நடவடிக்கை பேச்சுரிமை மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என்று அவர்கள் குற்றம் சாட்டி உள்ளார்கள். மேலும், இந்தத் திடீர் தடை விதிப்பு காரணமாக சமூக ஊடக வலைதளத்தைப் பயன்படுத்தும் பெரும்பாலான பொதுமக்கள்,
September 08, 2025 3:11 PM IST
வாட்ஸ்அப், ஃபேஸ்புக், X உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்குத் தடை.. நேபாள அரசு அதிரடி நடவடிக்கை!


