புது தில்லி: இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலைத் தொடா்ந்து, அந்நாட்டின் டெல் அவிவ் நகருக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் ஏா் இந்தியா நிறுவனம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கும் தில்லிக்கும் இடையே நேரடி விமானச் சேவையை வாரத்துக்கு நான்கு விமானங்களை ஏா் இந்தியா நிறுவனம் இயக்கி வருகிறது.
ஹமாஸ்-இஸ்ரேல் மோதல் காரணமாக கடந்த 5 மாதங்களாக இந்த வழித்தடத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானச் சேவை கடந்த மாதம் 3-ஆம் தேதி முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது.
இந்நிலையில், சிரியாவில் உள்ள தங்களின் துணைத் தூதரகத்தைத் தாக்கியதாக குற்றஞ்சாட்டி, இஸ்ரேல் மீது ஈரான் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலை ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

