வேலை தேடும் நோக்கில் சிங்கப்பூருக்கு வந்த வெளிநாட்டவர், இங்கு குற்றங்கள் செய்தால் சிறப்பு அனுமதி கிடைக்கும் என்ற அடுத்தவரின் பேச்சைக் கேட்டு குற்றத்தில் ஈடுபட்டதை அடுத்து தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்.
சிறப்பு அனுமதியின்கீழ் சிங்கப்பூரில் தங்கினால், பாலியல் தொடர்புடைய வீரிய மருந்துகளை விற்று பணம் சம்பாதிக்கலாம் என்றும் அந்த அடையாளம் தெரியாத நபர் கூறியுள்ளார்.
இதனை அடுத்து, இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு அவர் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.
பின்னர் கைதான அவர், பிணையில் வெளியே வந்துள்ளார். விசாரணைக்காக வேண்டி சிங்கப்பூரில் தங்க சிறப்பு அனுமதியும் அவருக்கு வழங்கப்பட்டது.
அந்த கால கட்டத்தில் அடையாளம் தெரியாத நபர் கூறிய ஆலோசனைப்படி, அவர் கேலாங்கில் பாலியல் தொடர்புடைய வீரிய மருந்துகளை பணத்திற்கு விற்பனை செய்துள்ளார்.
2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் இதே போன்ற குற்றங்களுக்காக சீன நாட்டவரான அவரும் மேலும் நான்கு சீன நாட்டவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (ஆக.29), அவருக்கு 11 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் அவர் சிங்கப்பூர் வந்ததாகவும், ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒர்க் பெர்மிட் வெளிநாட்டு ஊழியர்களுக்கு செப்.1 முதல் என்னென்ன மாற்றங்கள் / நடவடிக்கைகள்?

