• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மசோதாக்களை செயலற்றதாக்க சட்டப்பேரவைக்கு மட்டுமே அதிகாரம்; ஆளுநருக்கு இல்லை: நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் | tn govt argues in court for only the Legislative Assembly has the power to invalidate bills the Governor does not

GenevaTimes by GenevaTimes
September 3, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
மசோதாக்களை செயலற்றதாக்க சட்டப்பேரவைக்கு மட்டுமே அதிகாரம்; ஆளுநருக்கு இல்லை: நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் | tn govt argues in court for only the Legislative Assembly has the power to invalidate bills the Governor does not
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ஏகமன​தாக நிறைவேற்​றப்​படும் மசோ​தாக்​களை செயலற்​ற​தாக்​கும் அதி​காரம் சட்​டப்​பேர​வைக்​குத்​தான் உள்​ளது என்​றும் ஆளுநருக்கு அந்த அதி​காரம் இல்லை என்​றும் உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு வாதிட்​டது. சட்ட மசோ​தாக்​களுக்கு ஒப்புதல் அளிக்​கும் விவ​காரத்​தில் ஆளுநருக்​கும், குடியரசு தலை​வருக்​கும் கால நிர்​ண​யம் செய்து உச்ச நீதி​மன்​றம் உத்தரவிட்டது.

இதுதொடர்​பாக குடியரசுத் தலை​வர் எழுப்​பிய 14 கேள்வி​கள் தொடர்​பான வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிபதி பி.ஆர்.க​வாய், சூர்​ய​காந்த் உள்​ளிட்ட 5 நீதிப​தி​கள் அடங்​கிய அரசி​யல் சாசன அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது தமிழக அரசு தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் அபிஷேக் மனுசிங்​வி, சட்​டப்​பேர​வை​யில் அமைச்​சர​வை​யின் ஒப்​புதல்​படி ஏகமன​தாக நிறைவேற்​றப்​பட்ட ஒரு மசோ​தாவை செயலற்​ற​தாக்​கும் அதி​காரம் சட்​டப்​பேர​வைக்​குத்​தான் உள்ளதேயன்றி, ஆளுநருக்கு அந்த அதி​காரம் கிடை​யாது.

இதனால் மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிப்​பது தொடர்​பாக ஆளுநருக்​கும், குடியரசுத் தலை​வருக்​கும் கால நிர்​ண​யம் செய்து உச்ச நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வில் எந்த தவறும் இல்​லை.

இந்த விவ​காரத்​தில் எப்​போது தலை​யிட வேண்​டும், எப்​போது தலை​யிடக்​கூ​டாது என்​பது உச்ச நீதி​மன்​றத்​துக்கு நன்​றாகத் தெரியும். ஆளுநர்​கள், குடியரசுத் தலை​வரின் முடிவு​களை நீதி​மன்ற விசா​ரணைக்கு உட்​படுத்த முடி​யாது என்ற மத்​திய அரசின் வாதம் ஏற்​புடையதல்ல.

மசோ​தாக்​கள் மீது இறுதி முடிவு எடுக்​கும் நீதிப​தி​யாகவோ அல்​லது சூப்​பர் முதல்​வ​ராகவோ ஆளுநர் செயல்பட முடி​யாது. நிறைவேற்​றப்​படும் மசோதா சட்​டத்​துக்கு முரணானது என்​றால் அதை நீதி​மன்​றம் பார்த்​துக்​கொள்​ளும். அது​தான் அதி​காரப்​பிரி​வினை.

மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்​காமல் ஆளுநர் கிடப்​பில் போடு​வதை எதிர்த்து ஒவ்​வொரு முறை​யும் சம்​பந்​தப்​பட்ட மாநில அரசு உச்ச நீதி​மன்​றத்தை நாடி பாி​காரம் தேட முடி​யாது. எந்த மசோ​தாக்​களை​யும் தனித்​தனி​யாக பிரித்​துப் பார்க்க முடி​யாது. இதுதொடர்​பாக அரசி​யலமைப்பு சட்​டத்​தி​லும் உரிய திருத்​தங்​களைக் கொண்டு வர வேண்​டும்.

அது​போன்ற திருத்​தங்​கள் இல்லை என்​ப​தால் தான் உச்ச நீதி​மன்​றமே தனக்​குரிய அதி​காரத்​தைப் பயன்​படுத்தி இது​போன்ற காலநிர்​ண​யத்தை செய்​துள்​ளது. ஒரு​வேளை குறிப்​பிட்ட கால அளவைத்​தாண்டி ஆளுநர் கிடப்​பில் போட்​ட​டால் அந்த மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளித்​த​தாக கருதப்பட வேண்​டும், என வாதிட்​டார்.

அப்​போது நீதிபதி விக்​ரம்​நாத் குறுக்​கிட்​டு, இந்த விவ​காரத்​தில் ஆளுநருக்​குள்ள மூன்று வாய்ப்​பு​கள் குறித்து உச்ச நீதி​மன்​றமே ஏன் ஆராயக்​கூ​டாது என்​றார். அதற்கு தமிழக அரசு தரப்​பில், ‘‘மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்​கக்​கோரி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்​கல் செய்​தால் விசா​ரித்து தீர்ப்​பளிக்க ஓராண்​டாகி​விடும். உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​தால் 3 ஆண்டுகளாகிவிடும்.

இந்த கால அவகாசம் ஆளுநருக்கு வீட்டோ அதி​காரத்தை தரும். இதன்​மூலம் உச்ச நீதி​மன்​றம் காலக்​கெடு விதித்து பிறப்​பித்த உத்​தர​வால் பலன் இல்​லாமல் போய்​விடும், என வாதிடப்​பட்​டது. இதே​போல மேற்​கு​வங்க மாநிலம் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் கபில்​சிபில் ஆஜராகி, நாட்​டின் எதிர்​காலத்தை இந்த விவ​காரத்தை விசா​ரிக்​கும் உச்ச நீதி​மன்ற அரசி​யல் சாசன அமர்வு தீர்​மானிக்க வேண்​டும்.

ஆளுநருக்கு அளிக்​கப்​பட்​டிருக்​கும் அதி​காரத்தை விருப்​புரிமை​யாகக் கொள்​ளாமல் பொறுப்​புடைமை​யாகக் கருத வேண்​டும். மசோ​தாவை மாதக்​கணக்​கில் நிறுத்தி வைக்​கும் ஆளுநருக்​கான அதி​காரம் கட்​டற்​றது என்​றால் அபத்​த​மாகி​விடும் என வா​திட்​டார். அதையடுத்​து நீதிப​தி​கள்​ இந்​த வழக்​கு வி​சா​ரணை​யை இன்​றைக்​கு தள்​ளி வைத்​துள்​ளனர்​.



Read More

Previous Post

நீதிமன்ற வளாகத்தில் ஹரக் கட்டாவை கொலை செய்ய திட்டம்

Next Post

சீனாவின் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பில் பங்கேற்ற ரஷ்யா மற்றும் வட கொரிய அதிபர்கள் | உலகம்

Next Post
சீனாவின் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பில் பங்கேற்ற ரஷ்யா மற்றும் வட கொரிய அதிபர்கள் | உலகம்

சீனாவின் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பில் பங்கேற்ற ரஷ்யா மற்றும் வட கொரிய அதிபர்கள் | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin