அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகரும், வழக்கறிஞருமான ஜேக் சலிவன், அதிபர் ட்ரம்ப் பாகிஸ்தானுடனான தனது குடும்பத்தின் வணிக நன்மைக்காக இந்தியாவுடனான உறவை தூக்கி எறிகிறார் என்று விமர்சித்துள்ளார்.
ஜோ பைடன் அரசாங்கத்தில் முக்கிய பங்கு வகித்த ஜேக் சலிவன், இந்தியாவுடனான உறவை தியாகம் செய்வது, அமெரிக்கா சொந்த செலவில் சூனியம் செய்வதைப் போன்றது எனக் கூறியுள்ளார்.
அமெரிக்கா இந்தியா மீது அதிகப்படியான வரி விதித்துள்ளது, இந்தியா–பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக மீண்டும் மீண்டும் கூறிவருவது, ட்ரம்ப் குடும்பத்தின் பாகிஸ்தானுடனான வணிகம் ஆகியவற்றைப் பற்றி சமீபத்தில் அளித்த யூடியூப் சேனல் பேட்டியில் ஜேக் பேசியுள்ளார்.

