• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்: 800 பேர் உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல் | Powerful earthquake hits Afghanistan

GenevaTimes by GenevaTimes
September 2, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்: 800 பேர் உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல் | Powerful earthquake hits Afghanistan
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காபூல்: ஆப்​கானிஸ்​தானில் இரவில் அடுத்​தடுத்து ஏற்​பட்ட நிலநடுக்​கத்​தில் இது​வரை 800-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். ஏராள​மான கட்​டிடங்​கள் தரைமட்​ட​மாகி உள்​ளன. மீட்​புப் பணி​கள் முடுக்​கி​விடப்​பட்​டுள்​ளன.

ஆப்​கானிஸ்​தானின் கிழக்​குப் பகு​தி​யில் குணார் மாகாணம் ஜலாலா​பாத் அரு​கில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை இரவு சக்​தி​வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. இதில் பாகிஸ்​தான் எல்​லை​யில் உள்ள ஆப்​க​னின் கிராமங்​கள், பல மாடி கட்​டிடங்​கள் சரிந்து விழுந்​தன.

ஜலாலா​பாத்​துக்கு கிழக்கே 27 கி.மீ. தூரத்​தில் 8 கி.மீ. ஆழத்​தில் இந்த நிலநடுக்​கம் ஏற்​பட்​ட​தாக அமெரிக்க புவி​யியல் ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. குணார் மாகாணத்​தின் நூர் கால், சாவ்​கி, வாட்​பூர், மனோகி மற்​றும் சபா தாரா பகு​தி​களில் வீடு​கள், கட்​டிடங்​கள் நொறுங்​கிய​தால் உயி​ரிழப்பு அதி​கரித்​துள்​ளது.

குழந்​தைகள், பெண்​கள், முதி​ய​வர்​கள் என ஏராள​மான மக்​கள் இடி​பாடு​களில் சிக்​கி​யுள்​ளனர். ஞாயிற்​றுக்​கிழமை இரவு 11.47 மணி​யள​வில் முதல் நிலநடுக்​கம் 6.0 ரிக்​டர் அளவுக்கு ஏற்​பட்​டது. அதை தொடர்ந்து சில நிமிடங்​களில் 4.5 ரிக்​டர் அளவில் மீண்​டும் நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. இதில் இது​வரை 800-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். மேலும், 2,500-க்​கும் மேற்​பட்​டோர் கா​யம் அடைந்​துள்​ளனர்.

ஆப்​கானிஸ்​தானில் ஏற்​பட்ட நிலநடுக்​கம் தொடர்​பான சிசிடிவி காட்​கள் சமூக வலை​தளங்​களில் வைரலாகி வரு​கின்​றன. நிலநடுக்​கத்​தில் பல கிராமங்​கள் இருந்த வீடு​கள், பல மாடி கட்​டிடங்​கள் மண்​ணோடு மண்​ணாக சரிந்​துள்​ளன. இடி​பாடு​களில் ஏராள​மானோர் சிக்​கி​யிருக்​கலாம். இதனால் உயி​ரிழப்பு எண்​ணிக்கை அதி​கரிக்​கும் என்று அஞ்​சப்​படு​கிறது.

பாதிக்​கப்​பட்ட இடங்​களில் மீட்​புப் பணி​கள் தொடர்ந்து நடை​பெற்று வரு​கின்​றன. பல கிராமங்​கள் முற்​றி​லும் சேதமடைந்​துள்​ளன. அதனால் உயி​ரிழந்​தோர் மற்​றும் காயம் அடைந்​தவர்​களின் எண்​ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்​டுள்​ளது. குணார், நங்​கார்​ஹர், தலைநகர் காபூல் போன்ற நகரங்​களில் இருந்து மருத்​து​வக் குழு​வினர் சென்​றுள்​ளனர் என்று பொது சுகா​தா​ரத் துறை அமைச்சக செய்​தித் தொடர்​பாளர் ஷராபத் ஸமான் கூறி​னார். ஆப்​கானிஸ்​தான் வரலாற்​றில் இந்த நிலநடுக்​கம் மிக மோச​மானது என்று கூறுகின்​றனர்.

பிரதமர் மோடி இரங்​கல்: ஆப்​கானிஸ்​தானில் நிலநடுக்​கம் ஏற்​பட்​டதை அறிந்து பிரதமர் மோடி மிகுந்த வேதனை தெரி​வித்​தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்​கத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “ஆப்​கன் நிலநடுக்​கத்​தில் ஏராள​மானோர் உயி​ரிழந்​ததை அறிந்து மிக​வும் சோகம் அடைந்​தேன். உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​துக்கு இந்த நேரத்​தில் உறு​துணை​யாக இருப்​போம். அவர்​களுக்​காகப் பிரார்த்​தனை செய்​கிறோம். கா​யம் அடைந்​தவர்​கள் விரைந்து குணமடைய பிரார்த்​திக்​கிறேன். பா​திக்​கப்​பட்ட மக்​களுக்கு தேவை​யான அனைத்து மனி​தாபி​மான உதவி​களை​யும் இந்​தி​யா செய்​வதற்​கு தயா​ராக உள்​ளது” என்​று கூறியுள்​ளார்.



Read More

Previous Post

Gold Rate Today | மீண்டும் மீண்டுமா? தொடர் உச்சத்தில் தங்கம் விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி! | வணிகம்

Next Post

மலேசியா-சீனா உறவுகளை ஆழப்படுத்தவும், வர்த்தக ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் அன்வார் இன்று பெய்ஜிங்கில் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார் | Makkal Osai

Next Post
மலேசியா-சீனா உறவுகளை ஆழப்படுத்தவும், வர்த்தக ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் அன்வார் இன்று பெய்ஜிங்கில் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார் | Makkal Osai

மலேசியா-சீனா உறவுகளை ஆழப்படுத்தவும், வர்த்தக ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் அன்வார் இன்று பெய்ஜிங்கில் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin