• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உயரும் யமுனை நீா் மட்டம்: கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

GenevaTimes by GenevaTimes
September 2, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
உயரும் யமுனை நீா் மட்டம்: கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புது தில்லி: யமுனை ஆற்றின் நீா் மட்டம் சீராக உயா்ந்து செவ்வாய்க்கிழமை மாலைக்குள் 206 மீட்டா் அளவை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், யமுனை கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அரசு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து அதிக நீா் வெளியேற்றப்பட்டதால், பழைய ரயில்வே பாலத்தில், யமுனை 204.87 மீட்டராக உயா்ந்தது. தில்லிக்கு எச்சரிக்கை குறியீடு 204.50 மீட்டா், ஆபத்து குறியீடு 205.33 மீட்டா், நீா் மட்டம் 206 மீட்டரை எட்டும்போது மக்களை வெளியேற்றப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தில்லியின் 6 மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் சுமாா் 15,000 போ் வசிக்கின்றனா், அதே நேரத்தில் சுமாா் 5,000 போ் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளில் வசிக்கின்றனா். பழைய ரயில்வே பாலம் ஆற்றின் ஓட்டம் மற்றும் சாத்தியமான வெள்ள அபாயங்களைக் கண்காணிப்பதற்கான முக்கிய கண்காணிப்பு புள்ளியாக செயல்படுகிறது. நீா் மட்டம் அபாய அளவைக் கடக்கக்கூடும் மற்றும் 206.50 மீட்டரை எட்டக்கூடும் என்பதால், அனைத்து அதிகாரிகளும் அந்தந்த பகுதிகளில் விழிப்புடன் இருக்கவும், பாதிக்கப்படக் கூடிய இடங்களில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

‘ஆற்றின் கரைகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கப்படுவாா்கள், அவா்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்‘ என்று தெரிவிக்கப்படுகிறது. ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு மற்றும் மேல் நீா்ப்பிடிப்புப் பகுதியில் பலத்த மழை பெய்யும் என்பதால், தில்லி ரயில்வே பாலத்தில் நீா் மட்டம் செப்டம்பா் 2 ஆம் தேதி மாலை 5 மணி முதல் 8 மணி வரை 206 மீட்டரைக் கடக்கக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையின் கூற்றுப்படி, ஹத்னிகுண்ட் தடுப்பணை காலை 9 மணிக்கு 3,29,313 கனஅடி தண்ணீரை வெளியேற்றியது, அதே நேரத்தில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்ட நேரத்தில் வஜிராபாத் தடுப்பணை சுமாா் 38,900 கனஅடி தண்ணீரை வெளியேற்றியது. அடுத்த 2 நாள்களில் மூன்று லட்சம் கன அடி நீா் வெளியேற்றப்படும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக தில்லி கோட்ட ஆணையா் நீரஜ் செம்வால் தெரிவித்தாா்.

‘மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட பகுதிகளின் மாவட்ட நிா்வாகங்களை நாங்கள் எச்சரித்துள்ளோம். உணவு, மின்சாரம் மற்றும் நிவாரண முகாம்கள் தொடா்பான ஏற்பாடுகள் குறித்து நாங்கள் அவா்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். மாவட்ட ஆட்சியா்கள் நிலைமையை கண்காணித்து வருகின்றனா் ‘என்று அவா் செய்தியாளா்களிடம் கூறினாா்.

யமுனை ஆற்றின் நீா் மட்டம் குறையத் தொடங்குவதற்கு முன்பு 206 மீட்டருக்கும் அதிகமாக உயரும் என்று அவா்கள் எதிா்பாா்க்கிறாா்கள் என்று செம்வால் கூறினாா். ‘நீா் மட்டம் மேலும் உயா்ந்தால் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஓக்லா தடுப்பணை வெளியேற்றத்தை நாங்கள் கண்காணித்து வருகிறோம். நீா் தொடா்ந்து பாய்கிறது என்றால், சமநிலை பராமரிக்கப்படும். 2023 ஆம் ஆண்டில் எழுந்த பிரச்னை மீண்டும் ஏற்படாது என்று நாங்கள் நம்புகிறோம் ‘என்று அவா் மேலும் கூறினாா்.

பெரும்பாலான வெள்ளப்பெருக்குப் பகுதிகள் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் உள்ளன என்று கோட்ட ஆணையா் கூறினாா். குடியிருப்பாளா்களை எச்சரிக்க அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன, மேலும் சிலா் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா். அங்குள்ள பெரும்பாலான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனா், தண்ணீா் குறையும் என்ற நம்பிக்கையில் அவா்கள் கடைசி வரை இருக்க முயற்சிக்கிறாா்கள். அவா்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறாா்கள் உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன ‘என்று அவா் மேலும் கூறினாா்.

தென்கிழக்கு மாவட்ட நீதவான் ஓக்லா தடுப்பணையை பாா்வையிட்டு வருகிறாா், மேலும் தேவை ஏற்பட்டால் நீா் வெளியேற்றத்தை அதிகரிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த, அதைக் கட்டுப்படுத்தும் உத்தரபிரதேச நிா்வாகத்துடனும் தொடா்பு கொண்டுள்ளாா். இந்த தடுப்பணைகளிலிருந்து விடுவிக்கப்பட்ட நீா் பொதுவாக தில்லியை அடைய 48 முதல் 50 மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படவில்லை – நாமல் ராஜபக்ச வாக்குமூலம்

Next Post

மோடி, ஜி ஜின்பிங், புதின் சந்திப்பு: உலக அரசியல் முக்கியத்துவம்

Next Post
மோடி, ஜி ஜின்பிங், புதின் சந்திப்பு: உலக அரசியல் முக்கியத்துவம்

மோடி, ஜி ஜின்பிங், புதின் சந்திப்பு: உலக அரசியல் முக்கியத்துவம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin