• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தில்லி திரும்பினார் பிரதமர் மோடி!

GenevaTimes by GenevaTimes
September 1, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
தில்லி திரும்பினார் பிரதமர் மோடி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சீனா, ஜப்பான் பயணங்களை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப். 1) மாலை தில்லி திரும்பினார்.

இந்தியாவில் இருந்து ஆக. 29ஆம் தேதி ஜப்பான் புறப்பட்ட பிரதமர் மோடி, 4 நாள்கள் பயணங்களை முடித்துக்கொண்டு செப். 1 ஆம் தேதி மாலை தில்லி திரும்பினார்.

இந்தப் பயணத்தில் சீனாவின் தியான்ஜின் நகரில் ஆக. 31 முதல் செப். 1 வரை நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) இரண்டு நாள் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். சர்வதேச அளவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதிப்பை அதிகரித்து வரும் நிலையில், இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

சீன பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய பிறகு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

”சீனாவில் ஆக்கப்பூர்வமான பயணம் நிறைவு பெற்றது. இங்கு நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசினேன். உலகளாவிய முக்கிய பிரச்னைகளில் இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தேன். இந்த உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக அதிபர் ஷி ஜின்பிங்கிற்கும் சீன அரசுக்கும் மற்றும் மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

இப்பயணத்தில் சீனா, ரஷியா அதிபர்களை சந்தித்ததோடு மட்டுமல்லாமல், தெற்கு ஆசியா, மத்திய ஆசியா மற்றும் யுரேசியா நாடுகளைச் சேர்ந்த தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார். மாலத்தீவுகள், நேபாளம், லாவோஸ், வியட்நாம், ஆர்மீனியா மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் மோடி அவர்களிடம் எடுத்துரைத்தார்.

இதையும் படிக்க | டிராகன் முன்பு சரணடைந்தது யானை: மோடியை விமர்சிக்கும் காங்கிரஸ்

Prime Minister Narendra Modi returns after four-day visit to Japan and China, calls SCO summit productive

Read More

Previous Post

யாழில் கடவுச்சீட்டு பிராந்திய அலுவலகம் திறப்பு

Next Post

`மோடி இது குறித்து ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை…’- சீன அதிபருடனான சந்திப்பை விமர்சிக்கும் காங்கிரஸ்

Next Post
`மோடி இது குறித்து ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை…’- சீன அதிபருடனான சந்திப்பை விமர்சிக்கும் காங்கிரஸ்

`மோடி இது குறித்து ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை...'- சீன அதிபருடனான சந்திப்பை விமர்சிக்கும் காங்கிரஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin