சிங்கப்பூரில் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவன் முஹம்மது ஹைரில் பின் முஹம்மது எஃபெண்டியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்று (ஆகஸ்ட் 31) சூ காங் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட ஹைரிலின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த குடும்பத்தினர், அண்டை வீட்டார் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் சென்றிருந்ததாக Mothership கூறியுள்ளது.
அங்கு அஞ்சலி செலுத்த வந்த பெண் ஒருவர் கூறியதாவது; “ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட எங்களின் குழந்தையையும் நாங்கள் இழந்தோம். இதனால் பெற்றோரின் மனக் கவலை குறித்து எங்களுக்குத் தெரியும்,” என்றார்.

சிறுவனை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கு எங்களின் உதவி எப்போதும் இருக்கும் என்று அவர் கூறினார்.
சடலம் கண்டெடுப்பு
நேற்று முன்தினம் (ஆக.29) 29 மரைன் கிரசென்ட்டில் காலை 11:05 மணிவாக்கில் ஹைரில் காணாமல் போனார். அவருக்கு தொடர்பு திறன் குறைவு என்றும் விவரிக்கப்பட்டது.
பின்னர் நேற்று ஆகஸ்ட் 30 அன்று இரவு 9:55 மணியளவில், ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவிற்கு அருகில் உள்ள கடலில் மிதந்த நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
அந்த உடல் ஹைரிலின் என்பதை சிறுவனின் நெருங்கிய உறவினர் ஒருவர் அடையாளம் கண்டார்.
முதற்கட்ட விசாரணைகளில் சதி வேலை நடந்ததாக சந்தேகிக்கப்படவில்லை என காவல்துறையினர் கூறினர்.
காவல்துறை விசாரணைகள் தொடர்கின்றன.
சிங்கப்பூர் டாலருக்கு எதிரான இந்திய மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
Photos Credit: Mothership
The post சிங்கப்பூரை கலங்க வைத்த சிறுவனின் மரணம்: பொதுமக்கள் ஏராளமானோர் நேரில் அஞ்சலி appeared first on Tamil Daily Singapore.

