சிங்கப்பூரில் வேலைக்காக அழைத்துச் சென்ற பணிப்பெண்ணை நாசம் செய்த வேலைவாய்ப்பு ஏஜென்ட்டுக்கு சிறைத் தண்டனை மற்றும் பிரம்படி விதிக்கப்பட்டுள்ளது.
பணிப்பெண்ணை புதிய முதலாளியின் வீட்டிற்கு வேலைக்காக அழைத்துச் சென்ற அந்த ஏஜென்ட், தவறான முகவரிக்கு சென்றுள்ளார்.
மசாஜ் பார்லரில் தகாத சேவை… 10 பெண்கள் கைது
பின்னர், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு கார் நிறுத்துமிடத்தில் வைத்து அந்தப் பெண்ணை நாசம் செய்ததாக சொல்லப்பட்டுள்ளது.
2022 ஜனவரி 24, அன்று நடந்த இந்த குற்றத்தை ஒப்புக்கொண்டதால், 37 வயதான அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 12 பிரம்படிகளும் நேற்று (ஆகஸ்ட் 29) விதித்து உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
மேலும் 2021 ஆம் ஆண்டில் அதே பணிப்பெண்ணை பாலியல் மானபங்கம் செய்ததற்காகவும், இன்னொரு வீட்டுப் பணிப்பெண்ணை மானபங்கம் செய்ததற்காகவும் இரண்டு குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கும் முன்னர் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
மலேசியரான அவர் தவறு நடந்த நேரத்தில், வேலைவாய்ப்பு நிறுவனத்தில் மூத்த விற்பனை ஆலோசகராகப் பணிபுரிந்தார்.
மின்சிகரெட்: S பாஸ், ஒர்க் பெர்மிட் வெளிநாட்டு ஊழியர்களுக்கு செப்.1 முதல் கடும் நடவடிக்கை
அப்போது 24 வயதாக இருந்த பணிப்பெண் முதல் முறையாக 2022 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்தார். இந்தோனேசியரான அந்த பெண் அதே ஆண்டு ஜனவரி 21 அன்று ஏஜென்டுக்கு அறிமுகமானார்.
இந்நிலையில், அந்த பெண்ணை புதிய முதலாளியின் வீட்டிற்கு வேலைக்காக அழைத்துச் சென்ற அந்த ஏஜென்ட், இறந்த பெண்ணின் கணவர் குறித்து விசாரித்துள்ளார்.
அதோடு விடாத ஏஜென்ட் பணிப்பெண்ணிடம் என் காதலியாக இருக்கமுடியுமா என்று கேட்டுள்ளார், அதற்கு பணிப்பெண் மறுத்ததாக சொல்லப்பட்டுள்ளது.
மேலும் தன் மனைவி மலேசியாவில் இருப்பதாகவும் கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக மனைவியை நீண்ட நாட்களாக சந்திக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
பின்னர் லிப்ட்டில் வைத்து பணிப்பெண்ணை கட்டியணைத்தாகவும், மேலும் கார் நிறுத்துமிடத்தில் அழைத்து சென்று நாசம் செய்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, முதலாளியின் வீட்டுக்கு சென்ற பணிப்பெண் அழுதுகொண்டு சம்பவம் குறித்து கூற, மறுநாள் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
அதனை அடுத்து ஏஜென்ட் கைது செய்யப்பட்டார்.
4D லாட்டரியில் 50 மேற்பட்டோர் வெற்றி… ‘2250’ என்ற அதிஷ்ட எண்ணுக்கு கொட்டிய பரிசு!

