யூனியன் பிரதேசத்தில் மழை தொடர்பான பேரழிவுகளால் ஏற்பட்ட சேதங்களைக் கருத்தில் கொண்டு ஜம்மு-காஷ்மீருக்கு நிவாரண தொகுப்பை அறிவிக்குமாறு மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி மத்திய அரசை வலியுறுத்தினார்.
சமீபத்திய வெள்ளம், மேக வெடிப்புகள் மற்றும் நிலச்சரிவுகள் ஜம்மு-காஷ்மீரில் பரவலான பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. இதனால் ஜம்முவில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
பல உயிர்கள் பலியாகின. வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. உள்கட்டமைப்பு சேதமடைந்துள்ளன. பலர் குடும்பங்களை இழந்த தவிக்கின்றனர் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

