Last Updated:
9 நீதிபதிகள் அமர்வில் விசாரணை நடைபெற்ற நிலையில் பிரதமரை நீக்க 6 நீதிபதிகள் ஆதரவு தெரிவித்தனர்.
கம்போடிய தலைவருடன் பேசிய விவகாரத்தில் தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்து கம்போடியா நாடுகளுக்கு இடையே அண்மையில் எல்லைப் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், இரு நாட்டு ராணுவங்களும் தாக்குதலில் ஈடுபட்டன. இந்த நிலையில், பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் நிலையில், தாய்லாந்தின் பிரதமரான பேடோங்டார்ன் ஷினவத்ரா, கம்போடியா முன்னாள் பிரதமர் ஹன் சென்னுடன் பேசினார். ஹன் சென்னை Uncle என அழைத்த பேடோங்டார்ன், தங்கள் நாட்டு ராணுவ தளபதி குறித்து விமர்சித்து பேசியுள்ளார்.
இதுதொடர்பான ஆடியோ வெளியான நிலையில், பேடோங்டார்ன்க்கு எதிராக அரசமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 9 நீதிபதிகள் அமர்வில் விசாரணை நடைபெற்ற நிலையில் பிரதமரை நீக்க 6 நீதிபதிகள் ஆதரவு தெரிவித்தனர். இதுகுறித்து பேட்டி அளித்த பேடோங்டார்ன், இதுபோன்ற அரசியல் மாற்றங்களை அனுமதிக்கக் கூடாது என்றார். தாய்லாந்து வரலாற்றில் நீதிமன்றத்தால் பதவிநீக்கம் செய்யப்பட்ட 5வது பிரதமர் பேடோங்டார்ன் என்பது குறிப்பிடத்தக்கது.
August 30, 2025 8:09 AM IST

