
கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ரணிலின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அகில விராஜ் காரியவசம் கூறினார்.

