• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Bihar terror alert: பிகார் மாநிலத்திற்குள் ஊடுருவியுள்ள பாகிஸ்தான் பயங்கரவாதிகள்… சட்டமன்றத் தேர்தலைக் குலைக்க சதி? | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 28, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
Bihar terror alert: பிகார் மாநிலத்திற்குள் ஊடுருவியுள்ள பாகிஸ்தான் பயங்கரவாதிகள்… சட்டமன்றத் தேர்தலைக் குலைக்க சதி? | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் பிகார் மாநிலத்திற்குள் மூன்று தீவிரவாதிகள் நுழைந்திருப்பதாக அம்மாநிலக் காவல்துறை தலைமையகம், அனைத்து காவல் நிலையத்திற்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிகார் மாநிலத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக தேர்தல் ஆணையம், அந்த மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை மேற்கொண்டது. இதில், 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி பிகார் மாநிலத்தில் வாக்கு அதிகாரம் எனும் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்தப் பயணத்தில் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் பங்கேற்றிருந்தார்.

இதற்கிடையில், தேர்தல் ஆணையம் போலியான வாக்காளர்களை சேர்த்து தேர்தலில் மோசடி செய்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். மேலும், அதற்கு தகுந்த ஆதாரங்கள் தன்னிடம் உள்ளது என தெரிவித்த ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் அதனை வெளியிடவும் செய்தார். இதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் விவகாரம் ஒரு பக்கம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழலில் மறுபக்கம் அரசியல் கட்சிகள் பிகார் மாநிலத்தில் தீவிரமாக தேர்தல் பணிகளை செய்து வருகின்றன.

இந்தச் சூழலில் பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் நேபாளம் வழியாக பிகார் மாநிலத்திற்குள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை அந்த மாநில அரசுக்கு தகவல் கொடுத்துள்ளது.

இதனையடுத்து, பிகார் மாநில காவல்துறை தலைமையகம், அம்மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கும் இந்தத் தகவலை தெரிவித்து, மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சி.என்.என். நியூஸ்18க்கு கிடைத்த தகவலின்படி, பாகிஸ்தானின் ராவல்பிண்டியைச் சேர்ந்த ஹஸ்னைன் அலி, உமர்கோட்டைச் சேர்ந்த அடில் உசேன் மற்றும் பஹாவல்பூரைச் சேர்ந்த முகமது உஸ்மான் ஆகிய மூன்று பயங்கரவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பீகார் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களின் பெயர்கள், புகைப்படங்கள் ஆகியவை அனைத்து மாவட்ட காவல்நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த மூன்று பயங்கரவாதிகளும் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் நேபாளத்தின் காத்மாண்டுவிற்கு வந்து, அங்கிருந்து ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரத்தில், பீகாருக்குள் நுழைந்ததாக உளவுத்துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தல்களுடன், மாநிலத்தில் பயங்கரவாதத் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது குறித்து பாதுகாப்பு அமைப்புகள் அதிக எச்சரிக்கையுடன் உள்ளன.

நிலைமை குறித்து மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும், கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், கள தகவல்களை சேகரிக்கவும், சந்தேகத்திற்கிடமான எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அனைத்து மாவட்ட புலனாய்வுப் பிரிவுகளுக்கும் அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஊடுருவல்காரர்கள் நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பிகாரில் கடும் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவும் இருக்கின்றனர்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 28, 2025 4:46 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

Breaking: நெருங்கும் பிகார் சட்டமன்றத் தேர்தல்; மாநிலத்திற்குள் ஊடுருவியுள்ள பாகிஸ்தான் பயங்கரவாதிகள்! – காவல்துறைக்கு உளவுத்துறை எச்சரிக்கை

Read More

Previous Post

குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் குறித்து வெளியான தகவல்

Next Post

Ashwin – Dhoni : சி.எஸ்.கே. அணியில் தோனியை விட 2 மடங்கு அதிக சம்பளம் பெற்ற அஷ்வின்.. ஊதியத் தொகை எவ்வளவு தெரியுமா? | விளையாட்டு

Next Post
Ashwin – Dhoni : சி.எஸ்.கே. அணியில் தோனியை விட 2 மடங்கு அதிக சம்பளம் பெற்ற அஷ்வின்.. ஊதியத் தொகை எவ்வளவு தெரியுமா? | விளையாட்டு

Ashwin – Dhoni : சி.எஸ்.கே. அணியில் தோனியை விட 2 மடங்கு அதிக சம்பளம் பெற்ற அஷ்வின்.. ஊதியத் தொகை எவ்வளவு தெரியுமா? | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin