Last Updated:
தங்கு தடையின்றி நெட்வொர்க் வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஜியோவின் தொழில்நுட்பக் குழு தீவிர பணியாற்றி வருகிறது.
ஜம்மு காஷ்மீர், லடாக், இமாசல பிரதேச பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர், லடாக் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் ஏற்பட்ட கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேக வெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்ததால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
கனமழை, வெள்ளம், நிலச்சரிவு பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 –யை கடந்துள்ளது. இதற்கிடையே வெள்ள பாதிப்பு பகுதிகளில் மீட்புப் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கனமழை காரணமாக ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசங்களில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என்பதால் நிலைமையை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த நிலையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சிறப்பு நிவாரண அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தப் பகுதியில் உள்ள ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வேலிடிட்டி நாட்கள் கூடுதலாக 3 நாட்களுக்கு நீட்டிக்கப்படும். மொபைல் போன் வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் இல்லாமல் அன்லிமிட்டெட் போன் செய்யும் வசதி மற்றும் ஒரு நாளுக்கு 2 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படும் என ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் தெரிவித்துள்ளது.
August 28, 2025 12:23 PM IST
Jio : காஷ்மீர், இமாசல பிரதேச வெள்ள பாதிப்பு.. வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்தது ஜியோ


