இதனால், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் 87.3 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருள்களில் கிட்டத்தட்ட பாதி பொருள்கள் ட்ரம்பின் 50 சதவிகித வரிக்கு உள்ளாகும்.
குறிப்பாக, ஜவுளி, நகைகள், கடல் உணவுகள், தோல் பொருள்கள் உள்ளிட்ட பொருள்கள் பாதிப்புக்குள்ளாகும்.
அதோடு, ஏராளமான இந்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் பணிநீக்கம், வேலைவாய்ப்பின்மை ஆகிய பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
அதேசமயம், அமெரிக்காவுக்கு முக்கிய மருந்து சப்ளையாராக இந்தியா இருப்பதால், இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருள்களுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், ஐபோன் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் மின்னணு பொருள்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

