மட்டக்களப்பில் (Batticaloa) சிஜடி கைது செய்த இனியபாரதியின் சகா 7 மணி நேர விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சிஜடியினரால் நேற்று திங்கட்கிழமை (25) கைது செய்யப்பட்ட இனிய பாரதியின்
சகாவான பாலசுந்தரம் என்பவரை சுமார் 7 மணித்தியால
விசாரணையின் பின்னர் சிஐடியினர் விடுதலை செய்துள்ளதாக கைது செய்யப்பட்டவரின்
உறவினர்கள் தெரிவித்தனர்.
இனிய பாரதியின் சகாவாக செயற்பட்டிருந்த குறித்த நபரை சம்பவ தினமான நேற்று களுவங்கேணியிலுள்ள அவரது வீட்டில் வைத்து கொழும்பில் இருந்து சென்ற சிஜடியினர் கைது செய்தனர்.
காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்
இதனையடுத்து அவரை கொண்டு சென்று சுமார் 7 மணித்தியால
தொடர் விசாரணையின் பின்னர் இரவு 9.00 மணிக்கு விடுவித்துள்ளனர்.

இதேவேளை, மட்டக்களப்பில் (Batticaloa) பிள்ளையானின் (Pillayan) சகாவான சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பவர் ) குற்ற விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் எட்டாம் திகதி பிள்னையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் (2006 டிசம்பர் 15 ஆம் திகதி) கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் அவர் கைது செய்யப்பட்டு குற்ற விசாரணைப் பிரிவினால் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

