• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பொது இடங்களில் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை – முழு விவரம் | Supreme Court issues interim stay on removal of party flagpoles

GenevaTimes by GenevaTimes
August 25, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
பொது இடங்களில் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை – முழு விவரம் | Supreme Court issues interim stay on removal of party flagpoles
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: தமிழகத்​தில் பொது இடங்​கள், சாலை​யோரங்​களில் உள்ள அரசி​யல் கட்​சிகள், சாதி, மத அமைப்​பு​களின் கொடிக் கம்​பங்​களை அகற்ற வேண்​டுமென உயர் நீதி​மன்ற மதுரை கிளை பிறப்​பித்த உத்​தர​வுக்கு இடைக்​காலத் தடை விதி்த்​துள்ள உச்ச நீதி​மன்​றம், தற்​போதைய நிலையே தொடர உத்​தர​விட்​டுள்​ளது.

மதுரை கொடிக்​குளத்​தைச் சேர்ந்த அமா​வாசை தேவர் உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில், விளாங்​குடி​யில் அதி​முக சார்​பில் கொடிக்​கம்​பம் அமைக்க அனு​மதி கோரி தாக்​கல் செய்​திருந்த மனுவை விசா​ரித்த நீதிபதி ஜி.கே.இளந்​திரையன், பொது இடங்​கள், சாலைகள், உள்​ளாட்சி அமைப்​பு​களுக்​குச் சொந்​த​மான இடங்​களில் நிரந்​தர​மாக வைக்​கப்​பட்​டுள்ள அனைத்து அரசி​யல் கட்​சிகள், சாதி, மத மற்​றும் பிற அமைப்​பு​களின் கொடிக் கம்​பங்​களை அகற்ற வேண்​டும் என்​றும், தேவைப்​பட்​டால் இந்த கொடிக் கம்​பங்​களை, அவர்​களுக்கு சொந்​த​மான இடங்​களில் வைத்​துக்​கொள்​ளலாம் என்​றும் உத்​தர​விட்​டார்.

இந்த உத்​தரவை எதிர்த்து தொடரப்​பட்ட மேல்​முறை​யீட்டு மனுவை விசா​ரித்த நீதிப​தி​கள் ஜெ.நிஷா​பானு, எஸ்​.ஸ்ரீமதி ஆகியோர் அடங்​கிய அமர்​வு, தனி நீதிப​தி​யின் உத்​தரவை உறுதி செய்​து, மேல்​முறை​யீட்டு மனுவை தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டனர். உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யின் இந்த உத்​தரவை எதிர்த்து அமா​வாசை தேவர் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​திருந்​தார். இந்த மேல்​முறை​யீட்டு மனுவை விசா​ரித்த நீதிப​தி​கள் ஜெ.கே.மகேஸ்​வரி, விஜய் விஷ்னோய் ஆகியோர் அடங்​கிய அமர்வு அரசு நிலத்​தில் கொடிக்​ கம்​பங்கள் வைக்க எப்​படி அனு​மதி கோர முடி​யும், எனக்​கூறி உயர் நீதி​மன்ற உத்​தர​வில் தலை​யிட மறுப்பு தெரி​வித்​தனர். இந்​நிலை​யில், உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் கொடிக் கம்​பங்​களை அகற்​றும் விவ​காரம் தொடர்​பான வழக்கை விசா​ரித்த 3 நீதிப​தி​கள் அடங்​கிய அமர்​வும், உச்ச நீதி​மன்ற உத்​தரவு அடிப்​படை​யில் கொடிக் கம்​பங்​களை அகற்​றும் உத்​தரவை கடந்த ஆக.14 அன்று உறுதி செய்​தது.

இந்​நிலை​யில், இந்த உத்​தரவை எதிர்த்து சிபிஎம் மாநில செய​லா​ளர் பி.சண்​முகம் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தார். அதில், கொடிமரங்​களை அகற்ற வேண்​டும் என்​பது அரசி​யல் சாசன உரிமை, சமத்​து​வம், சுதந்​திர உரிமை​களைப் பறிப்​ப​தாகும். பொதுஇடங்​கள், சாலைகள், உள்​ளாட்சி அமைப்​பு​களுக்கு சொந்​த​மான இடங்​களில் நிரந்​தர​மாக அமைக்​கப்​பட்​டுள்ள அரசி​யல் கட்​சிகள், சாதி, மத மற்​றும் பிற அமைப்​பு​களின் கொடிக் கம்​பங்​களை அகற்ற வேண்​டுமென தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவு மாநில அரசின் நி்ர்​வாக உரிமை​யில் தலை​யிடு​வ​தாகும். கருத்​துரிமை, பொது இடங்​களில் கூடும் உரிமை​களை மறுக்க முடி​யாது. கொடிகளை அகற்ற உத்​தர​விடும் முன்​பாக அரசி​யல் கட்​சிகளின் கருத்​துக்​களை​யும் கோர​வில்​லை. எனவே கொடிக் கம்​பங்​களை அகற்ற வேண்​டுமென தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவை உறுதி செய்து 3 நீதிப​தி​கள் அடங்​கிய அமர்வு பிறப்​பித்​துள்ள உத்​தர​வுக்கு தடை விதிக்க வேண்​டும். தற்​போதுள்ள நிலையே தொடர உத்​தர​விட வேண்​டும் எனக் கோரி​யிருந்​தார்.

இந்த மேல்​முறை​யீட்டு மனு மீதான விசா​ரணை நீதிப​தி​கள் விக்​ரம்​நாத், சந்​தீப் மேத்தா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று நடை​பெற்​றது. மனு​தா​ரர் தரப்​பி்ல் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் எஸ். முரளிதர் மற்​றும் வழக்​கறிஞர் எஸ்​.பிரசன்னா ஆகியோர், இந்த வழக்கு விசா​ரணை​யில் சில முரண்​பாடு​கள் உள்​ளன. அனைத்து அம்​சங்​களை​யும் கருத்​தில் கொள்​ளாமல் உயர் நீதி​மன்ற மதுரை கிளை இந்த உத்​தரவை பிறப்​பித்​துள்​ளது என வாதிட்​டனர்.

அதையடுத்து நீதிப​தி​கள், இந்த மேல்​முறை​யீட்டு வழக்​கில் தமிழக அரசு உள்​ளிட்ட எதிர்​மனு​தா​ரர்​கள் பதிலளிக்க உத்​தர​விட்​டனர். அது​வரை தமிழகத்​தில் பொது இடங்​கள், சாலை​யோரங்​களில் உள்ள கொடிக் கம்​பங்​களை அகற்​றக்​கூ​டாது என்​றும், தற்​போதுள்ள நிலையே தொடர வேண்​டும் என்​றும் உத்​தர​விட்டு விசா​ரணையை தள்ளி வைத்​துள்​ளனர்.



Read More

Previous Post

சிக்கப்போகும் மைத்திரி – கோட்டா – CID தரப்பால் கசிந்த தகவல்

Next Post

ஜாரா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை முடியும் வரை ஐந்து மாணவிகள் மீதான வழக்கை ஒத்திவைக்கவும் – Malaysiakini

Next Post
ஜாரா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை முடியும் வரை ஐந்து மாணவிகள் மீதான வழக்கை ஒத்திவைக்கவும் – Malaysiakini

ஜாரா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை முடியும் வரை ஐந்து மாணவிகள் மீதான வழக்கை ஒத்திவைக்கவும் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin