ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் 2, 2025 அன்று தொடங்குகிறது. இந்தத் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இரு நாடுகளில் நடைபெற உள்ளது.
இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும். இந்திய அணி தனது முதல் போட்டியை செப்டம்பர் 2 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ளது. ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டி செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெறும். இத்தொடரில் மொத்தம் 13 போட்டிகள் நடைபெறும், அதில் 4 போட்டிகள் பாகிஸ்தானிலும், மீதமுள்ள 9 போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிலும் நடத்தப்படவுள்ளன.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. இந்த அணி, அனுபவமும் இளைஞர்களும் கலந்த கலவையாக உள்ளது.
ஆப்கன் அணியில், ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான் மற்றும் நூர் அகமது போன்ற உலகத் தரம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பது அணியின் மிகப்பெரிய பலம். இவர்களின் சுழல் தாக்குதல், எதிரணிக்கு கடும் சவாலாக இருக்கும்.
ரஹ்மனுல்லா குர்பாஸ், நஜீபுல்லா சத்ரான் போன்ற பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன் குவிப்பதில் வல்லவர்கள். இவர்கள் தொடக்கத்திலேயே ரன்களைக் குவித்து, அணிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக்கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
முகமது நபி மற்றும் அசமத்துல்லா ஒமர்சாய் ஆகியோர் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் திறமையாகச் செயல்படக்கூடியவர்கள். இவர்களின் இருபக்கப் பங்களிப்பு அணிக்கு முக்கியமானது. அனுபவம் வாய்ந்த ரஷீத் கான், மீண்டும் கேப்டன் பொறுப்பேற்றுள்ளார். அவரது தலைமையில் ஆப்கானிஸ்தான் அணி, உலகப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது.
இதனால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி வலுவான போட்டியாளராக இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
ஆப்கன் அணி- ரஷீத் கான் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், தர்வீஷ் ரசூலி, செடிகுல்லா அடல், அஸ்மத்துல்லா உமர்சாய், கரீம் ஜனத், முகமது நபி, குல்பாடின் நைப், ஷரபுதீன் அஷ்ரப், முகமது இஷாக், நூர் அஹ்மத், முஜீப், உர் ரஹ்மான், ஃபார் மஹ்மான் ஃபசல்ஹக் ஃபரூக்கி, நவீன் உல் ஹக்.
August 25, 2025 9:58 PM IST

