சமூக வலைதளங்களில் வைரலாவதற்காக இவ்வாறு அவர் செய்ததாகக் கூறப்படுகிறது. ஸ்பைடர்மேன் உடையணிந்து அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டியதால், சக பயணிகளுக்கும், நடைபாதையில் செல்வோரும் அச்சம் அடைந்தனர்.
அதிவேகமாகச் சென்றவரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். பின்னர், நெரிசல் மிகுந்த சாலையில் அதிவேகமாகச் சென்றது, நடைபாதையில் செல்வோருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது, தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியது என காவல் துறையினர் ரூ.15,000 வரை அபராதம் விதித்துள்ளனர்.
அதோடு மட்டுமின்றி புகைப்போக்கியான சைலன்ஸரை சீரமைத்து அதிக ஒலி எழுவதைப்போன்று வைத்திருந்ததற்காகவும், போக்குவரத்து விதிமீறலில் இவை வருவதால், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

