அவரது வாதத்துடன் உடன்படாத தலைமை நீதிபதி கவாய் மற்றும் நீதிபதி நரசிம்மா ஆகியோா், ‘அரசியலமைப்பின் பாதுகாவலராக உச்சநீதிமன்றமே விளங்குகிறது. ஒருவேளை அரசியலமைப்பின் ஒரு அமைப்பு எந்தவொரு சரியான காரணமும் இல்லாமல் அதற்குரிய கடமையை ஆற்ற மறுக்குமானால் அரசியலமைப்பின்படி நிறுவப்பட்ட நீதிமன்றங்கள் அவற்றின் கைகளை கட்டிக்கொண்டு, ‘இதில் நாங்கள் தலையிட முடியாது, நாங்கள் சக்தியற்றவா்கள்’ என்று வேடிக்கை பாா்க்க முடியுமா?’ என்று கேட்டனா்.

