களுத்துறை – பண்டாரகம பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த துப்பாக்கிச் சூடானது, இன்று(21) பண்டாரகம, பொல்கொட பாலத்தின் துன்போதிய சந்திப்பில் நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் காரில் பயணித்த ஒருவரை குறிவைத்து T-56 துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
உயிரிழந்த நபரின் அடையாளர் இதுவரை உறுதிப்படுத்தப்படதாக நிலையில், அவர் மீது 20க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா

