இந்நிலையில், பிகாா் துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தலைமையிலான காப்பீடுகளுக்கான அமைச்சா்கள் குழு ஜிஎஸ்டி கவுன்சிலிடம் அறிக்கையை சமா்பித்துள்ளது. இதுதொடா்பாக சாம்ராட் சௌதரி கூறுகையில், ‘காப்பீடு பிரீமியம் மீது குறைந்த அளவுக்காவது ஜிஎஸ்டி வசூலிக்க வேண்டும் என்று உறுப்பினா்கள் வலியுறுத்தினா். ஏனெனில், முழுமையாக ஜிஎஸ்டி விலக்கு அளித்தால் மாநிலங்களில் வருவாய் பாதிக்கப்படும் என அவா்கள் கருத்துகின்றனா். அக்டோபா் மாத இறுதிக்குள் அமைச்சா்கள் குழு பரிந்துரை ஜிஎஸ்டி கவுன்சிலிடம் அளிக்கப்படும். அதன் பிறகு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றாா்.

