• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“இது என் மீதான தாக்குதல் மட்டுமல்ல; நாங்கள் எடுத்த உறுதியின் மீதான ஒரு கோழைத்தனமான முயற்சி” – டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 20, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
“இது என் மீதான தாக்குதல் மட்டுமல்ல; நாங்கள் எடுத்த உறுதியின் மீதான ஒரு கோழைத்தனமான முயற்சி” – டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டெல்லியில் கருத்து கேட்பு கூட்டத்தின்போது முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்தியது அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தாக்குதல் நடத்திய நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

டெல்லி முதலமைச்சர் இல்லத்தில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தின்போது, மக்களின் குறைகளை முதலமைச்சர் ரேகா குப்தா கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்தில் இருந்த 41 வயது மதிக்கத்தக்க நபர், கூச்சலிட்டவாறு ரேகா குப்தாவை நோக்கி பாய்ந்து அவரின் தலைமுடியைப் பிடித்து சரமாரியாக தாக்கினார். மேலும், மோசமான வார்த்தைகளால் வசைபாடியதுடன், கனமான பொருளைக் கொண்டு முதலமைச்சரை தாக்கியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இதில், ரேகா குப்தாவின் முகம் மற்றும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட நபரைப் பிடித்த காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், அவர் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த ராஜேஷ் கிம்ஜி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரது புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பேசிய அந்த இளைஞரின் தாய், தனது மகனை மன்னித்து விடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், நாய்கள் மீது அன்பு கொண்ட தனது மகன், காப்பகங்களில் தெரு நாய்களை அடைக்கும் மாநகராட்சியின் நடவடிக்கையால் இவ்வாறு செய்து விட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், “இதுபோன்ற தாக்குதல்கள் எனது மனநிலையையோ அல்லது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எனது உறுதியையோ ஒருபோதும் உடைக்க முடியாது. இப்போது, முன்பை விட அதிக ஆற்றலுடனும் அர்ப்பணிப்புடனும் நான் உங்களுடன் இருப்பேன்” என டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தனது எக்ஸ் பக்கத்தில், “இன்று காலை என் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என் மீதான தாக்குதல் மட்டுமல்ல. டெல்லிக்கு சேவை செய்யவும், மக்களின் நலனுக்காகவும் பாடுபடவும் நாங்கள் எடுத்த உறுதியின் மீதான ஒரு கோழைத்தனமான முயற்சி.

आज सुबह जनसुनवाई के दौरान मेरे ऊपर हुआ हमला केवल मेरे ऊपर नहीं, बल्कि दिल्ली की सेवा और जनता की भलाई के हमारे संकल्प पर किया गया एक कायराना प्रयास है।

स्वाभाविक है कि इस हमले के बाद मैं सदमे में थी, परन्तु अब बेहतर महसूस कर रही हूँ। मैं अपने सभी शुभचिंतकों से निवेदन करती हूँ कि…


— Rekha Gupta (@gupta_rekha) August 20, 2025

இந்த தாக்குதலுக்குப் பிறகு நான் அதிர்ச்சியில் இருந்தேன். ஆனால், தற்போது நலமாக இருக்கிறேன். விரைவில் நான் மீண்டும் உங்களுடன் இணைந்து பணியாற்றுவேன்.

இதுபோன்ற தாக்குதல்கள் எனது மனநிலையையோ அல்லது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எனது உறுதியையோ ஒருபோதும் உடைக்க முடியாது. இப்போது, முன்பை விட அதிக ஆற்றலுடனும் அர்ப்பணிப்புடனும் நான் உங்களுடன் இருப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 20, 2025 10:03 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

“இது என் மீதான தாக்குதல் மட்டுமல்ல; நாங்கள் எடுத்த உறுதியின் மீதான ஒரு கோழைத்தனமான முயற்சி” – டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா

Read More

Previous Post

நல்லூரில் நகைகள் திருடவந்த இந்திய பெண்கள் உட்பட எண்மர் கைது

Next Post

பமீலா லிங் காணாமல் போனது தொடர்பான விசாரணையில் 4 எம்ஏசிசி அதிகாரிகளிடம் விசாரணை | Makkal Osai

Next Post
பமீலா லிங் காணாமல் போனது தொடர்பான விசாரணையில் 4 எம்ஏசிசி அதிகாரிகளிடம் விசாரணை | Makkal Osai

பமீலா லிங் காணாமல் போனது தொடர்பான விசாரணையில் 4 எம்ஏசிசி அதிகாரிகளிடம் விசாரணை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin