Last Updated:
இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடவுள்ளார். பாஜக சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் தனது பதவியை கடந்த மாதம் 21ஆம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வுசெய்வதற்கான தேர்தலை அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், போட்டி இருந்தால், அடுத்த மாதம் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7 ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணிக் கட்சிகள் சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிர மாநில ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டுள்ளார்.
‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் சார்பில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில், காங்கிரஸ் கட்சி அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Delhi,Delhi,Delhi
August 19, 2025 1:07 PM IST


