Last Updated:
தனி நபர் போட்டிகள் மட்டுமின்றி குழுப் போட்டியிலும் இந்தியா வெண்கலம் வென்றுள்ளது.
கஜகஸ்தானில் நடைபெற்று வரும் ஆசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் மனு பாக்கர் 219.7 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் அவருக்கு வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது.
இது ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் மனு பாக்கர் வென்ற 10-வது பதக்கம். அவர் ஏற்கனவே பாரிஸ் ஒலிம்பிக் 2024-இல் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். அதன் மூலம் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் இந்தோனேசியாவின் சியு சிங் (Siu Ching) 243.2 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். தென்கொரியாவின் யாங் ஜி-இன் (Yang Ji-in) 241.6 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
August 19, 2025 7:25 PM IST


