Last Updated:
இந்தியாவை பொறுத்த அளவில் டி20 போட்டிகளில் பல வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட அதிரடி பேட்ஸ்மேன் ஒருவர் வாய்ப்பை இழக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 9-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது.
இந்த தொடரில் விளையாடும் இந்திய அணி நாளை அறிவிக்கப்படும். இந்த தொடரில் இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. டி20 ஃபார்மெட்டை அடிப்படையாக வைத்து ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விளையாடப்பட உள்ளது.
இதில் 8 அணிகள் மற்றும் பி என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய நாடுகளும், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளும் இடம்பெறுகின்றன. இந்தியாவை பொறுத்த அளவில் டி20 போட்டிகளில் பல வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனால் எந்த வீரர்களை அணியில் சேர்ப்பது மற்றும் தவிர்ப்பது என்கிற சவால் தேர்வு குழுவுக்கு காணப்படுகிறது.. இதன் அடிப்படையில் சில முக்கிய வீரர்கள் அணியில் இடம் பெற மாட்டார்கள் என்று பரவலாக பேசப்படுகிறது. அவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் ஒருவர். இவர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் முதல் 4 இடங்களில் விளையாடுவதால் அவரை எங்கே இடம் பெற வைப்பது என்கிற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் சுப்மன் கில்லை அணியில் இடம் பெற வைக்க தேர்வுக்குழு ஆர்வம் காட்டுவதால் ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. இதேபோன்று ஐபிஎல் தொடரில் ரிங்கு சிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இருப்பினும் அவர் பினிஷர் ரோலில் செயல்படுவதால் அவர் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புகள் குறைவாக உள்ளன.
மேலும் அவரை விட முக்கியமான பேட்ஸ்மேன்கள் டாப் ஆர்டரில் இருப்பதால் ரிங்கு சிங்குக்கு வாய்ப்புகள் குறைவாக உள்ளன. அவரை நீக்கினால் நிதிஷ்குமார் மற்றும் சிவம் துபே போன்ற ஆல் ரவுண்டர்களை அணியில் சேர்க்கலாம். இந்த கோணத்திலும் பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.
August 18, 2025 7:57 PM IST


