Last Updated:
இந்த தொழில்நுட்பம் சுவிட்சர்லாந்து போன்ற சில நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தண்டவாளங்களுக்கு இடையே சோலார் பேனலை அமைக்கும் திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது. இதன் மூலம் தண்டவாளங்களில் ஒரு இன்ச் இடம் கூட வீணாகாது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
காலியிடங்களில் சோலார் பேனல்களை பொருத்து சூரிய மின் ஒளியில் மின்சாரம் தயாரிப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதற்கு நல்ல லாபம் கிடைப்பதால் பல்வேறு தரப்பினரும் இந்த சோலார் பேனலை பொருத்துவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.
அந்த வகையில் தற்போது ரயில்வே துறையும் தண்டவாளங்களுக்கு இடையே சோலார் மின் தகட்டை பொருத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளது.
முதற்கட்டமாக, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் (BLW) என்ற ரயில்வே பிரிவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தண்டவாளங்களுக்கு இடையேயான இடத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது, ரயில்வேயின் “நெட் ஜீரோ கார்பன் எமிஷன்” (Net Zero Carbon Emission) இலக்கை அடைய உதவுவது, மேலும் நிலம் கையகப்படுத்துதல் இல்லாமல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துவது ஆகியவை இந்த திட்டத்தின் நோக்கங்களாகும்.
இந்த பகுதியில் தொடக்கமாக 70 மீட்டர் நீளத்திற்கு 28 சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை ஒரு மணி நேரத்திற்கு 15 kW மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.
இந்த சோலார் பேனல்கள் அதிர்வுகளைத் தாங்கும் வகையில் ரப்பர் பேட்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், ரயில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகளின் போது இந்த பேனல்களை எளிதாக அகற்றவும், மீண்டும் பொருத்தவும் முடியும் என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.
இந்த தொழில்நுட்பம் சுவிட்சர்லாந்து போன்ற சில நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
August 18, 2025 6:09 PM IST


