Last Updated:
ராகுல் காந்தி, பிகாரில் வாக்காளர் உரிமை யாத்திரையை இன்று தொடங்குகிறார். 16 நாட்களில் 23 மாவட்டங்கள், 1300 கிமீ பயணம். பாஜக-தேர்தல் ஆணையம் மீது வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு.
வாக்குத் திருட்டு விவகாரத்தில் வாக்காளர் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிகாரில் இன்று முதல் 16 நாட்களுக்கு யாத்திரை மேற்கொள்ள உள்ளார்.
மக்களவைத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜகவுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைக் கண்டித்து பிகாரில் யாத்திரை செல்ல ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். வாக்காளர் உரிமை யாத்திரை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரையை ரோத்தாஸ் மாவட்டத்தில் உள்ள சசாராம் பகுதியில் இன்று தொடங்க உள்ளார். 16 நாட்களில் 23 மாவட்டங்களில் சுமார் ஆயிரத்து 300 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபெறும் இந்த யாத்திரை அடுத்த மாதம் ஒன்றாம் தேதி பாட்னாவில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துடன் நிறைவடைய உள்ளது.
August 17, 2025 9:49 AM IST


