ஆங்கிலேய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்று, இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு நாடுகள் பிறந்தன. இந்தப் பிரிவினையின்போது ஏற்பட்ட வன்முறைகள், புலம்பெயா்ந்த மக்களின் அவலங்கள் மற்றும் உயிரிழப்புகளை நினைவுகூரும் வகையில், பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி பிரிவினைக் கொடூரங்கள் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

