Last Updated:
ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவம் எல்லை பகுதியில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
எல்லைப் பகுதி அருகே இந்திய ராணுவ வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் எல்லையில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதனை முறியடிக்க இந்திய பாதுகாப்புப் படையினர் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள தங்தாரில் மறைவான பகுதிகளில் பதுங்கியபடி தாக்குதலில் ஈடுபடுவது, எதிரிகள் தாக்குதல் நடத்தினால் அதனை எதிர்கொள்வது ஆகியவை குறித்து பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தப் பயிற்சிகள் அமைந்துள்ளன.
Jammu and Kashmir
August 16, 2025 10:24 PM IST


