Last Updated:
காசாவில் உணவுப்பஞ்சத்தை தீர்க்க வான்வழி உணவு விநியோகம் நடத்தப்பட்டு வருகிறது.
காசாவில் ஏற்பட்டுள்ள உணவு பஞ்சத்தை தீர்க்க வான்வழியாக வழங்கப்படும் உணவு விநியோகம் தங்களுக்கு எதிரான ஆயுதம் என இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேல் ராணுவம், காசா பகுதி மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதுதவிர உணவுப்பஞ்சம் காரணமாக பசியால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காசாவில் நிலவும் உணவுப்பஞ்சத்தை போக்க சர்வதேச நாடுகள் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் வான்வழியாக உணவுப்பொருட்களை வழங்கி வருகின்றனர். இதுவரை 100க்கும் மேற்பட்ட விமானங்கள் மூலம் பாாசூட் உதவியுடன் உணவுப்பொருட்கள் விநியோகிப்பட்டுள்ளன.
இந்நிலையில் காசா மக்களுக்கு வழங்கப்படும் உணவு தங்களுக்கு எதிரான ஆயுதம் என இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தொண்டு நிறுவனங்கள் இஸ்ரேல் விதித்துள்ள கட்டுப்பாடுகள் பொதுமக்களின் அவசர தேவைக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க மற்ற நாடுகள் முன்வந்ததன் காரணமாகவே காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்கிவருவதாக கூறப்படுகிறது.
August 15, 2025 9:26 PM IST
காசாவில் உணவுப்பஞ்சம்: “உணவு விநியோகம் எங்களுக்கு எதிரான ஆயுதம்..” இஸ்ரேல் பரபரப்பு குற்றச்சாட்டு!


