ஒரு நிமிஷம் ஓடக் கூடிய இந்த விடியோவுடன் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மக்களின் உரிமைகள் பறிக்கப்பட அனுமதிக்கக் கூடாது. இம்முறை கேள்விகளை எழுப்பி, பதில் பெற வேண்டும். வாக்கு திருட்டுக்கு எதிராக மக்கள் குரலை உயா்த்த வேண்டும். அரசியல் சாசன அமைப்புகளை பாஜகவின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.

