Last Updated:
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்ததன் மூலம் ஸ்ரேயாஸ் ஐயர் டாப் 10 இடத்துக்குள் வந்துள்ளார்.
ஒரு நாள் போட்டிகளுக்கான ஐசிசி பேட்ஸ்மேன் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் டாப் 10 இடங்களில் 4 இந்திய அணி பேட்ஸ்மேன்கள் இடம் பெற்றுள்ளார்கள்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாதந்தோறும் சிறந்த அணிகள், பேட்ஸ்மேன், பவுலர்கள் உள்ளிட்டோருக்கான தரவரிசையை வெளியிட்டு வருகிறது. டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகள் அடிப்படையில் இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.
இந்த நிலையில் சிறந்த ஒருநாள் போட்டிக்கான சிறந்த 10 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் 4 பேர் இடம் பிடித்துள்ளார்கள். அதில் குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அவர் எந்த ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடவில்லை. இருப்பினும் அவர் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசமை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பாபர் ஆசம் மொத்தமே 56 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. முன்னதாக ரோகித் சர்மா 2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 180 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்த போட்டிகளில் ரோஹித்தின் ஸ்டிரைக் ரேட் சிறப்பாக இருந்தது. இந்நிலையில் முந்தைய போட்டிகளை கணக்கில் கொண்டு பாபர் மற்றும் ரோஹித்தை ஒப்பிட்டு ரோஹித்துக்கு ஐசிசி இரண்டாம் இடத்தை வழங்கி உள்ளது.
August 13, 2025 11:30 PM IST


