Last Updated:
கடந்த சில வாரங்களாகவே சஞ்சு சாம்சனை மையப்படுத்தி சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருவது கவனிக்கத்தக்கது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் வெளியேற விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் பரவின. அதன் பின்னணி காரணங்கள் குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியில் கேப்டனாக செயல்பட்டார். அவரை மெகா ஏலத்திற்கு முன்பு ராஜஸ்தான் அணி 18 கோடி ரூபாய் கொடுத்து தக்க வைத்துக் கொண்டது. நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ஒரு அரைசதத்துடன் சாம்சன் 285 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் ராஜஸ்தான் அணி மிக மோசமாக விளையாடியது.
ஒட்டு மொத்தமாக தரவரிசை பட்டியலில் ஒன்பதாவது இடத்துடன் ராஜஸ்தான் ராயல்ஸ் நிறைவு செய்தது. இந்நிலையில் தன்னை அணியில் இருந்து விடுவிக்கும்படி அணி நிர்வாகத்திடம் வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்கான பின்னணி காரணங்கள் சிலவைகள் உள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக அந்த அணியில் இடம் பெற்றிருந்த ஜாஸ் பட்லரை ராஜஸ்தான் அணி விடுவித்து இருந்தது. அவர் நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி 538 ரன்கள் கொடுத்திருந்தார். இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கும் சாம்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தன்னை விடுவிக்கும்படி ராஜஸ்தான் அணி நிர்வாகத்திடம் சஞ்சு சாம்சன் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவரை ட்ரேடு முறையில் வாங்குவதற்கு சென்னை அணி முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதேபோன்று மற்ற சில அணிகளும் சஞ்சீவ் சாம்சனை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
August 13, 2025 9:51 PM IST


